pagadi

January 30, 2012

நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தி

Filed under: Uncategorized — பகடு @ 9:51 am

காபிர் சார்வாகன் சொன்னாரேன்னு போயி தவ்ஹீத் அண்ணனின் தொண்டரடிப்பொடி ஜூவனப்பிரியன் பதிவுக்கு போய் இருள், ஒளி, மேகம், அலைன்னு காககககே புல்லரிச்சதை இவரும் சேர்ந்து புல்லரிச்சி கடைசில ஏதோ சுவனப்பிரியனுக்கே காக்காவலிப்பு வந்தமாதிரி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று திருப்பித்திருப்பி போட்டாரா… நான் பயந்து என்னடா இவரு ஒரு மதத்தைஆரம்பிச்சிர்ரப்போறாரு. இருக்கிற கிறுக்கன்களையே தாங்க முடியலை.. இன்னொன்னா? உலகம் தாங்குமாடா சாமின்னு ஓடியாந்துட்டேன். இன்னும் வயிரு பக்கீர்ன்னுது.

இந்த காபிர் சார்வாகனை என்ன பண்ணா தேவலை? கைலை கெடச்சா கைமாதான்.

அதுவும் நம்ம காயல் பட்டினத்துக்கு பக்கத்தில் இருக்கிற முத்து குளிக்கிறவங்களை கேட்டாலே கடலுக்குள் இருக்கும் இருட்டை பத்தி சொல்லிப்புடுவானே? கை நீட்டினா கை தெரியாத ஆழம் என்பது அங்கே சாதாரணமா பேசறதாச்சே?  ஒருவேளை நம்ம காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா காவவில் உளறிய பிறகுதான் தமிழ்நாட்டில் முத்துகுளிக்கவே ஆரம்பிச்சாங்களா? பவழத்தை கடல்லேர்ந்து எடுக்கிறதை பல்லாயிரம் வருடமா மனிதர்கள் பண்ணிக்கிட்டிருக்காங்களே? ஒரு வேளை நம்ம காககககே மொஹம்மத் இப்பனு அப்பதல்லா சொன்னதுக்கு அப்புறம்தான் பவழத்தை எடுக்கவே ஆரம்பிச்சாங்களா? தமிழ்நாட்டை பத்தி என்ன கதை வேணாலும் உடலாம். மாற்றுமத சகோதரர்னு சொல்லி  பரம்பரையா முத்துகுளிக்கிற குடும்பத்திலேர்ந்தே மொஹம்மது நபி சொல்றதுக்கு முன்னாடி நாங்க முத்து குளிச்சதே கிடையாதுங்கன்னு சொல்றமாதிரி ஆதாரம் காட்டிபுடுவாங்க. ஆனால் ரோமன் மித்தாலஜியிலேயே முத்தும் பவழமும் வருதே.. என்னாங்கடா இந்த ஜூவனப்பிரியர்கள் கொழப்புறார்கள்!

அதனால படம் போட்டு பாகங்களை குறிப்போம் ஜுல்கர்னைன் கண்ணாடி குடுவைக்குள் சென்று 600 அடி ஆழத்துக்கு மேல் கடலுக்குள் சென்று வந்ததை விவரிக்கும் படம்.

ஜுல்கர்னைன் என்றால் அலெக்ஸாந்தர்.

ஆக ராஜா போறதுக்கு முன்னாடி எவனும் இன்னும் ஆழத்துக்கு போயிட்டு வந்திருப்பான். அவன் கதை கதையா சொல்லியிருப்பான். கதைக்கு மேல கதை. நம்ம காககககே மொஹம்மத் இப்பனு அப்பதல்லா  ஒரு புள்ளி குத்தினா கோடு போட்டு ரோடு போடற நம்ம மூமின்களை பார்த்தாலே தெரியுதுல்ல?

At the age of 11, Alexander entered a glass case, reinforced by metal bands and had himself lowered into the sea by a chain over 600 feet long.
 
http://www.mlahanas.de/Greeks/UnderWater.htm

Aristotle wrote, “…they enable the divers to respire equally well by letting down a cauldron, for this does not fill with water, but retains the air, for it is forced straight down into the water.” Other observers have remarked that the heating of the air, by breathing and by pressure, posed a problem for bell divers. Aristotle says that a breathing tube is used by divers: Just as divers are sometimes provided with instruments for respiration, through which they can draw air from above the water, and thus may remain a long time under the sea, so also have elephants been furnished by nature with their lengthened nostril; and, whenever they have to traverse water, they lift this up above the surface and breathe through it, 

ஆனா அதுவெல்லா எதுக்கு?
இப்ப ரொம்ப முக்கியமான விஷயம், ஹூரிகளை நினைத்து காய்ந்து போயுள்ள சுவனப்பிரியனும் நம்ம காககககேவின் சீடர்களான இதர ஈமான்ந்தாரிகளும் புல்லரிப்பதே..

ஆஹா  வந்துடிச்சி  ஜூவனப்பிரியண்ட புல்லரிப்பு.
மூளையோ புத்தியோ தேவையில்லன்னு கமல்ஜித் ரேஞ்சில் எடுத்து உட்டிறவேண்டியதுதான்.

நடுவுல நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தியை பாத்து வேற ஓவரா சிரிச்சி வாய் வலி வயித்துவலியா போய்டிச்சி.  அதுவும் தவ்ஹீத் அண்ணனுக்கு முன்னாடி உக்காந்துகிட்டு ஆங்கிலத்தில் பொளந்து கட்டிக்கிட்டு இருக்கிற நம்ம தவ்ஹீத் தம்பி வேற பிராக்கெட் ஜாக்கெட்டுன்னு ஒரே அடிதடி.  பைபிள்ள பிராக்கெட் போட்டிருக்காங்களாம். அது பைபிளில் மக்கள் கைவைத்துவிட்டார்கள் என்று ஆதாரமாம். உங்களுக்கு சிரிப்பு வருமா வராதா? நீங்களே சொல்லுங்கள். குரானிலும் ஹதீஸிலும் பிராக்கெட் போடும் கலையில் டாக்டரேட் வாங்கியவர்கள், பழம் சாப்பிடுவதை பூவை சாப்பிடுவதாக மாற்றியவர்கள்,  பைபிளில் பிராகெட் போட்டிருப்பதை ஏதோ குற்றம் என்று சொன்னால்…ஆகவே அது உண்மையானதல்ல என்று சொன்னால், …  எதிரே பார்த்துகொண்டிருந்த பார்வையாளர்களை பார்த்தேன். ம்ம்.. விஜய் டிவி போன ஜன்மம் ஆராய்ச்சியில் இவர்களை விட்டால் போன ஜன்மத்தில் தவ்ஹீத் அண்ணனை தர்ம அடி போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.  வென! திருப்பி  வாங்குகிறார்கள்.

ஒரு காமெடியை பாத்து ஆஹா அல்லாஹ்வே இறங்கி வந்து சொல்றமாதிரி இருக்குய்யான்னு இறையாவேசம் வந்துடிச்சி எனக்கு.

நம்ம தவ்ஹீத் தம்பி குரானை ஹதீஸை மேற்கோள் காட்டறவங்க கிட்ட கேக்கறார். “டே செரைக்க வரும்போது செரக்கிற கத்தியையும் எடுத்துகிட்டு வரணும்டா…” இதையே மூனு நாலுதடவை சொல்றார். அவருக்கு இருக்கிற தாடி ரொம்ப அரிக்குது போலருக்கு.. உட மாட்டேன்றார். “செரக்க வரும்போது செரக்கிற கத்தியையும் எடுத்துட்டு வர்ணுமா இல்லையா” அது மாதிரி நீ குரான் ஹதீஸை மேற்கோள் காட்டணும்னா நீ அரபிக் படிச்சிருக்கணுமா இல்லையா? அரபியில மொழிப்புலமை இருக்காடா?” என்று ஏறுகிறார். ஆனால் நம்ம தவ்ஹீத் தம்பி அதே அளவு கோலை பைபிளில் குற்றம் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்த மாட்டார் என்பதில்தான் தன்னை எவ்வளவு பெரிய ஈமாந்தாரி என்று காட்டிகொள்கிறார். ஆங்கிலம் தமிழ் என்று பைபிளை அடுக்குகிறார். இந்த மொழிபெயர்ப்புக்கும் இந்த மொழிபெயர்ப்புக்கும் எத்தனை வித்தியாசம் இருக்கு பார். இதுதான் கடவுளின் வார்த்தையா? தமிழ்ல எழுதினது கடவுளின் வார்த்தை என்றால், ஆங்கிலத்தில் எழுதியது கடவுளின் வார்த்தை அல்ல. பாருங்க மக்களே உங்களை எல்லாம் ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள் என்று அம்முகிறார். பாருங்கள். குரான் அரபியில் மட்டுந்தானே நாம படிக்கிறோம்? தமிழ் ஆங்கிலம்னு வேறொரு மொழியில் மொழிபெயர்ப்பு உண்டா?

தவ்ஹீத் அண்ணன் ஆங்கிலத்தில் பேசக்கூடிய சில இளைஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறார். அவர்கள் நம்ம தவ்ஹீத் அண்ணனிடமிருந்து எதை கற்றுகொண்டார்களோ தெரியவில்லை. ஆனால், அவரை மாதிரி செரக்கிறது.. ஆமாவா இல்லியா போன்ற வார்த்தை விளையாடல்களிலும், எதிராளி சொன்னதை திரித்து இவஞ்சொல்றான் என்று சொன்னவருக்கே விளக்கம் கொடுப்பதிலும் தலை சிறந்து விளங்குகிறார்கள். அதை விட அதிகமாக அவரைப் போலவே சேம்சைட் கோல் போடுவதிலும்  ஹைவான்களாக இருக்கிறார்கள்.

நம்ம தவ்ஹீத் அண்ணனையும் அவரது தொண்டரடிப்பொடிகளை பற்றியும் தெரியாத கிறிஸ்துவ அண்ணாச்சிகள், ரொம்ப மரியாதையாகவும், ஒரு வித அச்சத்தோடும் (இறையச்சம் அல்ல, எதிரே உட்கார்ந்த ¢ருக்கிற ஈமாந்தாரிகள் மேலுள்ள அச்சம்) மெல்ல மெல்ல ஹதீஸ்களை கூறுகிறார்கள். அதற்கு முன்னாடியும், இது ஹதீஸில் இருக்கிறது, குரானில் இருக்கிறது நான் இங்கே சொல்கிறேன் . தவறாக எடுத்துகொள்ளக்கூடாது என்று இருநூறு தடவை மன்னிப்பு கேட்டு சொல்கிறார்கள். இருந்தாலும், கூட்டத்தில் சலசலப்பு. பின்னாடி இருக்கிற ஒருத்தர், அண்ணே எதுக்கும் கொஞ்சம் அமுக்கி பேசுங்க.. தாடிகளை பார்த்தா பயமாக்குது. வீட்டுலேர்ந்து கிளம்பும்போதே போகாதே போகாதேன்னா பொண்டாட்டி என்று கிசுகிசுக்கிறார். உடனே பேசிகொண்டிருப்பவர் அமுக்குகிறார்.

கடவுளின் வார்த்தை என்றால் முன்னுக்கு பின் முரணாக இருக்கக்கூடாது. நேத்திக்கு ஒன்னு இன்னிக்கி ஒன்னுன்னு சொன்னா மனுஷனையே மதிப்போமா? அதானே? (நாஸிக் மன்சூக்.. சீ போங்க சார் இப்படியா சேம் சைட் கோல் போடறது?). எல இறைதூதர் இப்படி பேசலாமாலே? எல இப்படி கற்பழிக்கிறது, நெருங்கிய சொந்தக்கார பெண்ணையே லவுட்டுறது இதெல்லாமாடே வேதம்? என்ற ரீதியில் இப்படியே நெறய சேம்சைட் கோல். ஆனா ஒன்னு ஒரு கிறிஸ்துவ அண்ணாச்சி அத திருப்பி போட்டு, இதே தானேங்க உங்க குரான்லயும் இருக்கு? நீங்களே குளிக்காம அழுக்கா இருந்துகிட்டு தெருவில போறவனை அழுக்குன்னு சொல்லலாமா என்கிறார்.

அங்கத்தான் நம்ம தவ்ஹீத் அண்ணன் நிக்கார். “எல, பைபிள்ல  அப்படி இருக்குன்னா அது பைபிளுக்கு குத்தம். அத குரானுக்கு அப்ளை பண்ணக்கூடாதுல” என்று சாத்துகிறார். இதெப்படி இக்கு?

அதவிட பெரிய காமெடியெல்லாம் நடந்திச்சி. ஆனா ஒரு கட்டத்தில,  செரக்கிறதை பற்றியே கவலைப்பட்டுக்கிட்டிருந்த தாடிக்கார தம்பி, கடைசியில் நான் கிரேக்கம், ஹீப்ரூ எல்லாத்திலயும் பொலவனாக்கும் என்றெல்லாம் காமெடி. உனக்கு அரபி மொழி தெரியுமாடே என்று குரான் மொழி பெயர்ப்பை வைத்து பேசிய கிறிஸ்துவ அண்ணாச்சியை மிரட்டிய தம்பி,   அப்ப ஒரிஜினல் கிரேக்கத்தை எடுத்து வந்தல்லவா அது மாற்றப்பட்டது என்று நிரூபிக்க வேண்டும்? அதான் நம்ம தவ்ஹீத் அண்ணன் வழி .. சரி சரி.. நம்ம காககககே வழி.

ஆரம்பத்தில ஒரு கிறிஸ்துவ அண்ணாச்சி ஆங்கிலத்தில் பேச அதனை ஒவ்வொரு வார்த்தையும் தமிழில்
சொல்ல இப்படி போகிறது.
ஆங்கில தாடிக்கார அண்ணாச்சி:  it (நீட்டி முழக்கி)
பின்னாடி உட்கார்ந்திருக்கும் தமிழ் அண்ணாச்சி: அதுவாகப்பட்டது
ஆங்கில தாடிக்கார அண்ணாச்சி:  but (நீட்டி முழக்கி)
பின்னாடி உட்கார்ந்திருக்கும் தமிழ் அண்ணாச்சி: ஆனாலாகப்பட்டது
ஆங்கில தாடிக்கார அண்ணாச்சி:  what (நீட்டி முழக்கி)
பின்னாடி உட்கார்ந்திருக்கும் தமிழ் அண்ணாச்சி: என்னவாகப்பட்டது
ஆங்கில தாடிக்கார அண்ணாச்சி:  meaning? (எல்லோரையும் கேட்கிறார்)
பின்னாடி உட்கார்ந்திருக்கும் தமிழ் அண்ணாச்சி: அர்த்தம் என்று கர்த்தரின் பெயராலே கேட்கிறேன்.

இப்படியே போனால் என்ன எழவு புரியும்?  அதுவும்  உட்கார்ந்திருக்கும் எல்லோரும் மடையர்கள் போலவும், இவருக்கு மட்டுமே கர்த்தர் சத்தமா பேசுடா என்று ஆணையிட்டது போலவும்  சர்ச்சில் பேசுவார்களே.. அது மாதிரி.. பின்னாடி ஒருத்தர் பின்பாட்டு வேற.. இதில என்னத்தை புரிஞ்சி ? அதனாலத்தானோ என்னவோ, நம்ம தவ்ஹீத் அண்ணன், நீ பதினெட்டு கேள்வியென்ன பதினாயிரம்  கேள்வி கேட்டியின்னாலும், ஒரே பதில்தாம்ல என்று சொல்லி ஊத்தி மூடிவிட்டார். “ குரான்ல சொல்ற தவ்ரத்தும், இஞ்சிலையும் நாங்க நம்புறோம். ஆனா நீ வச்சிருக்கிறது தவ்ரத்துமில்ல இஞ்சிலுமல்ல. ” ஒரே பதில்.

ஏன் நம்ம தவ்ஹீத் அண்ணன் 18 கேள்விக்கும் பதில் சொல்லலைன்னு காரணம் இருக்கு. ஏன்னா,  நம்ம காககககே தவ்ரத் வச்சிட்டு இருக்கிற யூதர்கள்ட்ட, என்னையும் ஒரு தீர்க்கதரிசின்னு ஏத்துக்கிங்கடே என்று ரொம்ப தடவை கெஞ்சிவிட்டார். அப்போதெல்லாம் அவருக்கு அவங்க வச்சிருக்கற தவ்ரத் ஒரிஜினல் தவ்ரத்து இல்லைன்னு தெரியலை. அப்படி ஒரு எற வசனமும் எறங்கல. அதனால், உங்களிடம் இருக்கும் தவ்ரத்தையும் நானே கொடுத்தேன் என்று அல்லாஹ் சொல்ற மாதிரி எறக்கிபுட்டார். ஆனா, இந்த யூதர்கள் ஏத்துகிடலைன்னதும், போங்கடா உங்கள் தவ்ரத்து சரியில்லைன்னு அல்லாஹ்வை விட்டு திட்ட ஆரம்பிச்சிட்டார்.  இந்த கிறிஸ்துவர்கள் அந்த பழைய வசனத்தையெல்லாம் கொண்டாந்தி, இத நீங்க நம்புற குரானே இதயெல்லாம் சொல்லுதேன்னு சொன்னா எப்படி பதில் சொல்றது? அதனால்தான், ஒரே பதில்! நீ பதினெட்டு கேள்வி கேட்டாலும் சரி பதினெட்டாயிரம் கேள்வி கேட்டாலும் சரி, ஒரே பதில்தான்னு அடாவடி. ஒவ்வொரு கேள்வியா பதில் சொன்னா டவுசர் கிழிஞ்சிரும்ல?


காபிர் சார்வாகன் போன்று பலரும் அதற்கப்புறம் என்ன நடந்தது என்று அறியாமல் இருப்பதால் ஒரு சின்ன அப்டேட்

யார் என்ன தீர்ப்பு சொல்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், போலீஸ் தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்.

இதோ போலீஸ் எழுதிய தீர்ப்பு!!!

போலீஸ் எழுதிய தீர்ப்பில்
1) பைபிளில் இருக்கும் அதப்பியமான வரிகளை காட்டி அது இறைவன் கொடுத்ததல்ல என்று தவ்ஹீத் ஜமாத்துவாதாடினார்கள்
2) இதே போல சாட்சி காரர்கள் குரானில் பெண்களை அதப்பியமாக விவரணை செய்யும் வரிகளை காட்டி அதுவும் இறைவன் கொடுத்ததல்ல என்று வாதாடினார்கள். முன்னுக்கு பின் முரணாக பைபிளில் நபிகள் நாயகம் இருக்கிறார்/இல்லை என்று தவ்ஹீத் அண்ணன்  பேசியதை/எழுதியதை குறிப்பிட்டு காட்டினார்கள்.விவேகானந்தர் முகம்மதுவை யோகி இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டினார்கள்.
3 . இன்னொரு விவாதத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
4 தம்பலவன்களும் கிறிஸ்துவர்களும் ஈமான்ந்தாரிகளும் (தவ்ஹீத் தவிர) தொலைக்காட்சியில் காட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆகவே அடுத்த விவாதம் தடை செய்யப்படுகிறது.

(ஒன்று புரியவில்லை. இந்த விவாதத்துக்கும் தம்பலவன்களுக்கும் என்ன சம்பந்தம்? தேவையில்லாமல் அவர்களில் யார் புகார் கொடுத்தது? அல்லது இவர்களாக எழுதிகொண்டார்களா?)

சாட்சி அபோலஜடிக் நெட்வொர்கினர் தோற்று ஓடினார்கள் என்று அறிவித்துகொண்டு  தவ்ஹீத் அண்ணனின் அறிவிப்பு
http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/san-ran-away-from-debate/

தவ்ஹீத் அண்ணனும் தொண்டரடிப்பொடிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியாக “குரான் இறைவேதமே” என்று  போஸ்டர் அடித்துகொண்டு விவாத விளக்கம் செய்யும் அழகு

http://www.tntj.net/Ho-live/medium.php

குரான் இறைவனின் வார்த்தை இல்லை என்று போஸ்டர் அடித்து கிறிஸ்துவ அண்ணாச்சிகள் விளக்கம்

ஆகவே ஈமாந்தாரிகளுக்கும், கிறிஸ்துவ அண்ணாச்சிகளும் அடித்துகொள்ளும் குஸ்தி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்று மிக்க வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.

78 Comments »

  1. //இந்த காபிர் சார்வாகனை என்ன பண்ணா தேவலை? கைலை கெடச்சா கைமாதான்.//ஹா ஹாஎனக்குகைமாபிடிக்கும் அதுக்காக என்னையே கைமா பண்ணின்னல்.நாந்தான் முதல் படித்து விட்டு வந்து சண்டை போடலாம்

    Comment by சார்வாகன் — January 30, 2012 @ 10:32 am

  2. மார்க்க மே(பே)தை இ.சாசகொ சு.பி பதிவை படித்துஇட்டு வர சொன்னால் உம்மை யாரு பின்னூட்டம் போட சொன்னங்க!!!!!!!!!!!!.சரி இதெல்லாம் பொது வாழ்வில் சகஜம் தானே!!!!!!!!!*********கிறித்த்வர்கள், தவுகீத் அண்ணன் விவாதம் பற்றி தொடர் பதிவு எழுத வேண்டும் என் வேண்டுகோள்!!!!!!!!!!!!!

    Comment by சார்வாகன் — January 30, 2012 @ 10:42 am

  3. பைபிளும் குரானும் ஒரே மாதிரிதான் சொல்லுது. வேற இன மக்களை போட்டுத்தள்ளு கொள்ளையடி கற்பழிää நுனித்தோலை அறுத்துக்கோ அப்படின்னு ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கு. ஆனால் இரண்டுமே என் கடவுள்தான் உண்மைன்னு உலகமெங்கும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் இப்போதுதான் ஆரம்பிக்கிறார்கள் போலுள்ளது. இஞ்சா அல்லா நடப்பது நல்லதுக்குத்தான்.

    Comment by RAJA — January 30, 2012 @ 4:49 pm

  4. காபிர் சார்வாகன், சரியாப்போச்சு. உங்களுக்கு தெரியாதா?அடுத்த அமர்வுக்குள்ளே போலீஸே தீர்ப்பு சொல்லி விவாதத்தைமுடித்துவிட்டார்கள்.பதிவை அப்டேட் பண்ணனும் போலருக்கே உங்களுக்காக.இன்னொன்னு, சுபி பதிவில நான் எதுவும் பின்னூட்டம் போடலை.

    Comment by Ibnu Shakir — January 30, 2012 @ 5:14 pm

  5. பாஸ்,இறை வேதம்னு ஒன்னுமே கிடையாது….இறைவனை-இயற்கையை ஓரளவிற்கு உணர்ந்தவர்கள் சொன்னது தான் வேதம் மதம் எல்லாம். அந்த இறைவனை அல்லது இயற்கையை உணர்ந்தவர்களின் பக்குவத்தை பொறுத்து மதங்களும் வேறுபடுகிறது அவர்களின் கொள்கைகளும் வேறுபடுகிறது. குரான் இறை வேதமா இல்லையானு ஒரு பதிவு சீக்கிரம் வரும்னு நினைக்கிறேன்…பார்ப்போம்.

    Comment by R.Puratchimani — January 30, 2012 @ 8:05 pm

  6. //பைபிளும் குரானும் ஒரே மாதிரிதான் சொல்லுது. வேற இன மக்களை போட்டுத்தள்ளு கொள்ளையடி கற்பழிää நுனித்தோலை அறுத்துக்கோ அப்படின்னு ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கு.// கிறிஸ்தவர்கள் பின்பற்றுவது புதிய ஏற்பாட்டை. இதில்தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும் இருக்கிறது. பழைய ஏற்பாட்டு சட்ட திட்டங்களில் பத்து கட்டளைகளை தவிர மற்றவைகளை பின்பற்றுவதில்லை. அதனால்தான் இஸ்லாமிய நாட்டு சட்டங்களுக்கும் கிறஸ்தவ நாடுகளின் சட்டங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எந்த கிறிஸ்தவ நாட்டிலும் கல்லெறிந்து கொல்வதில்லை, குழந்தைத் திருமணம் அனுமதிக்கப்படுவதில்லை. கிறிஸ்தவர்கள் சுன்னத் செய்வதில்லை.

    Comment by Robin — January 30, 2012 @ 8:22 pm

  7. //பைபிளும் குரானும் ஒரே மாதிரிதான் சொல்லுது. வேற இன மக்களை போட்டுத்தள்ளு கொள்ளையடி கற்பழிää நுனித்தோலை அறுத்துக்கோ அப்படின்னு ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கு.// கிறிஸ்தவர்கள் பின்பற்றுவது புதிய ஏற்பாட்டை. இதில்தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும் இருக்கிறது. பழைய ஏற்பாட்டு சட்ட திட்டங்களில் பத்து கட்டளைகளை தவிர மற்றவைகளை பின்பற்றுவதில்லை. அதனால்தான் இஸ்லாமிய நாட்டு சட்டங்களுக்கும் கிறஸ்தவ நாடுகளின் சட்டங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எந்த கிறிஸ்தவ நாட்டிலும் கல்லெறிந்து கொல்வதில்லை, குழந்தைத் திருமணம் அனுமதிக்கப்படுவதில்லை. கிறிஸ்தவர்கள் சுன்னத் செய்வதில்லை.

    Comment by Robin — January 30, 2012 @ 8:23 pm

  8. போலீஸ் கமிஷனர் உத்தரவைப் படித்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும், இது பி.ஜெ வின் ஏற்பாடு என்று. ஒரு இடத்தில் (except TNTJ) என்று வரும் பாருங்கள்.http://www.sakshitimes.org/index.php?option=com_content&task;=view&id;=566&Itemid;=42

    Comment by Robin — January 30, 2012 @ 8:24 pm

  9. பி.ஜெ இதுவரை இந்த அளவுக்கு விஷய ஞானம் உள்ள பதிலடி கொடுக்கும் குழுவினரை பார்த்திருக்க மாட்டார். குரானைப் பற்றிய விவாதம் நடந்தால் பதில் சொல்லத் தெரியாமல் மீண்டும் பழையதுபோல ஆராய்ச்சி செய்ய போகிறேன் என்று எஸ்கேப் ஆக வேண்டியிருக்கும், அதனால்தான் எப்படியாவது விவாதத்தை தடுக்கவேண்டும் என்று 'ப்ளான்' பண்ணி செய்திருக்கிறார்.

    Comment by Robin — January 30, 2012 @ 8:27 pm

  10. சகோ ராபின், குரான் பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகள் ஏற்க்கனவே இணையத்தில் இருப்பின் அதன் சுட்டி தாருங்கள் நன்றி.

    Comment by R.Puratchimani — January 30, 2012 @ 9:54 pm

  11. http://isakoran.blogspot.in/

    Comment by Robin — January 30, 2012 @ 10:04 pm

  12. ஜனவரி 28,29 அகிய தேதிகளில் நடைபெற இருந்த விவாதத்திற்கு காவல்துறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், SAN ஒருபோதும் பொதுவிவாதத்திற்கு சம்மதிக்கவில்லை, மாறாக காவல்துறை உத்தரவை மீறாதபடிக்கு தனிப்பட்ட முறையில் விவாதம் நடப்பதற்கே சம்மதித்திருந்தோம் (SAn மற்றும் TNTJ க்கு இடையேயான மின்னஞ்சல்களை வாசித்துப் பாருங்கள்). ஆகவே, SAN விவாதத்திற்கு வரவில்லை என்று கூறப்படும் பொய் குற்றச் சாட்டு பல கேள்விகளை எழுப்புகிறது:1) நேரடி ஒளிபரப்பில்லாமல் தனிப்பட்ட முறையில் வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு TNTJ ஏன் ஒப்புக் கொள்ளவில்லை? உலகமெங்கிலும், எல்லா விவாதங்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை, வீடியோ பதிவுடனேயே அவை நடைபெறுகின்றன. இஸ்லாமிய தலைப்பில் பேசுவதற்கு TNTJ அலுவலகத்திற்குச் செல்ல SAN விருப்பத்துடன் இருக்கும்போது, SAN கூறிய நியாயமான ஆலோசனையை TNTJ ஏற்றுக் கொள்ள மறுத்தது ஏன்?2) TNTJ தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி , பின்னர் SAN குழுவினரை சட்டப் பிரச்சனைகளில் சிக்க வைக்க திட்டமிட்டிருந்தனரா? SAN நேரடி ஒளிபரப்புக்கு சம்மதித்து விவாதத்திற்குச் சென்றிருக்குமானால், SAN குர்-ஆன் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த ஆரம்பித்த உடன், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை TNTJ உண்டாக்கி இருக்கக் கூடும். காவல்துறை தடை உத்தரவை நேரடியாக மீறி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியரின் அலுவலகத்திற்குச் சென்று இஸ்லாமிய தலைப்பில் விவாதிப்பது வன்முறையை உண்டாக்கினால், அது முஸ்லீம்களுக்கு அல்ல, கிறிஸ்தவர்களுக்கே பிரச்சனையாக இருக்கும். TNTJ தங்களுடைய அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, தங்கள் தலைப்பைக் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.3) விவாதத்திலிருந்து ஓடிப் போவதை ஒருபோதும் விரும்பாத,ஏற்றுக் கொள்ளாத SAN விவாதத்திலிருந்து ஓடிப் போனதாக TNTJ ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? காவல்துறை தடை உத்தரவுக்குப் பின் நிகழ்ந்த அனைத்து மின்னஞ்சல் பரிமாற்றங்களையும் வாசியுங்கள், சாக்‌ஷி குழுவினர் காவல்துறை உத்தரவுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்திருப்பதைக் காண முடியும். இப்படி இருக்கும் போது சாக்‌ஷி குழுவினர் விவாதத்திலிருந்து ஒடி விட்டனர் என்று சொல்வது வடிகட்டின பொய் அல்லவா?4) TNTJ தங்கள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு விவாதம் நடை பெறும் இடத்தில் இருப்பதாக மக்களுக்கு முன் ஏன் நடிக்க வேண்டும்?5) SAN உடன் இணைந்து TNTJ காவல் அதிகாரியிடம் வந்திருக்கையில், TNTJ காவல் துறை உத்தரவை ஏன் மறைக்க வேண்டும், அது குறித்து ஒன்றுமே தெரியாதது போல காட்டிக் கொண்டனரே, ஏன்? உண்மையைச்சொலவதானால், எங்களைத் தொடர்பு கொண்ட அனேக முஸ்லீம் சகோதரர்கள் விவாதத்திற்கு காவல் துறை தடை உத்தரவு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.6) பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாம் குறித்த தலைப்பில் விவாதிக்க விரும்புவதில்லை, அப்படிப்பட்ட விவாதம் நடைபெறாமலிருக்க எல்லாவகையான தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். இதை TNTJ மறுபடியும் நிருபித்திருக்கிறது. காவல்துறை விவாதத்தை தடை செய்ததற்கு TNTJ தான் காரணம் என்று நாங்கள் நம்புவதற்கு போதிய நியாயமான காரணங்கள் உண்டு. அதன் பின்னர் நடந்த கபட நாடகம் ஏற்கனவே அவர்கள் தீர்மானித்த படி அரங்கேறியது.

    Comment by Robin — January 30, 2012 @ 11:08 pm

  13. காவல்துறை தடை உத்தரவுக்கு TNTJ தான் காரணம் என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்?1) தடை உத்தரவுக்கான காரணங்களில் ஒன்று ( 3வது குறிப்பு) கூறுவது என்னவெனில், “ பைபிளில் நபிகள் நாயகம் குறித்து கூறப்பட்டிருப்பதைப் பற்றி P.ஜெய்னுலாபீதின் அவர்கள் கூறின முரண்பாடான வாக்கியத்தை அவர்கள் குறைகூறி விமர்சனம் செய்தனர்”. PJ ன் முரண்பாடுகளைக் குறை கூறினால் யார் பாதிக்கப்படுவார் என நாங்கள் கேட்கிறோம். கிறிஸ்தவர்களோ, இந்துக்களோ அல்லது முஸ்லீம்களில் மற்ற பிரிவினரொ அல்ல, TNTJ மாத்திரமே அதனால் பாதிப்படையக் கூடும்.2) 5வது குறிப்பு கூறுவது : “மேலும் இந்துக்கள், கிறிஸ்தவ மற்றும் (TNTJ தவிர்த்த) முஸ்லீம் அமைப்புகள் குறிப்பிட்ட சில ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.” தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்னர் TNTJ உம் காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாமல், நேரடி ஒளிபரப்புக்கு TNTJ எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று காவல் துறையினருக்கு எப்படி தெரிந்து இருக்க முடியும்?குர்-ஆன் குறித்த விவாதத்தை TNTJ ஒருபோதும் விரும்பவில்லை என நாங்கள் ஏன் நினைக்கிறோம்?1) ஆடிட்டோரியம் முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, SAN மற்றும் TNTJ இருவரும் இணைந்து இரண்டு இடங்களுக்குச் சென்றனர், ஆடிட்டோரிய அலுவலர்கள் 28,29 ஆகிய தேதிகளுக்கும் அரங்கத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வர், ஆனால் SAN திரும்பி வந்த உடனேயே ஆடிட்டோரியம் அந்நாட்களில் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதாக தொலைபேசி அழைப்பு வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இவ்வாறு நடந்துள்ளது. அரங்கம் இரத்தாவதற்கு பின்னால் இருந்து இயங்கியது யார்?2) இரண்டு முறை ஆடிட்டோரியம் இரத்தான பின்பு, TNTJ அரங்க அலுவலர்களை தொடர்பு கொண்டு அரங்கை இரத்து செய்யாமலிருக்கும்படி, SAN ஒரு கிறிஸ்தவ பள்ளி அரங்கை விவாதத்திற்கு என பதிவு செய்திருந்தது. பள்ளிக் கூட அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத TNTJ காவல் துறை மூலமாக விவாதத்தை தடை செய்யும் வழியைத் தேர்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லையா?3) ஹைதராபாத் மற்றும் குர்நூல் ஆகிய இடங்களில் ஜாகீர்நாயக் அவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விவாதங்கள், இரண்டு இடங்களிலும் இதே போல காவல் துறையினரின் குறுக்கீட்டால் தடை செய்யப்பட்டது. இப்போது இஸ்லாமியத் தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கையில், மறுபடியும் அது இரத்து செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் தவறான கூற்றுகளையும் குற்றச் சாட்டுகளையும் எதிர்கொள்வதற்குப் பதிலாக அறிவார்ந்த மறுப்புகளை இரத்து செய்வதற்கு எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளையும் இஸ்லாமிய அறிஞர்கள் பயன்படுத்த முயற்சிப்பது அவர்களின் அணுகுமுறை என்பது தெள்வாகிறது அல்லவா?SAN கிறிஸ்தவ தலைப்பில் TNTJ உடன் விவாதம் செய்தது. ஆனால் இஸ்லாமிய தலைப்பில் விவாதம் செய்யாமல் தந்திரமாக தப்பித்துச் செல்வது TNTJ ஆகும். பரிசுத்த வேதாகமத்தின் மீதான விவாதத்தை மட்டுமே பார்க்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவர், SAN உடன் TNTJ குர்-ஆன் குறித்து விவாதம் செய்ய பயப்படுவது ஏன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.இது ஒரு மொழிபெயர்ப்புsource: http://www.sakshitimes.org/index.php?option=com_content&task;=view&id;=566&Itemid;=42

    Comment by Robin — January 30, 2012 @ 11:09 pm

  14. குரானை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் கூட்டம், நிச்சயமாக அதன் நம்பகத்தன்மையை சோதித்துப்பார்க்க களம் இறங்காது, ஏனெனில் அது அவர்களது பிழைப்பில் மண் விழுந்து விடும், பிஜே கூட்டம் இதை செய்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை,சோதித்துப் பார்ப்பதற்கு அவர்களாகவே இப்படி பயப்படுவது அதன்(குரான்) நம்பகத் தன்மையை கேள்விக்குரியாக்கிவிட்டது,பிஜே பாணியில் சொல்வதானால், ஒரு குற்றவாளியே தான் குற்றவாளி இல்லை என்று சொல்லுவது எப்படியோ அப்படிப்பட்ட கூத்தை TNTJ ‍ என்ற இஸ்லாமை தொழிலாக (Business) ‍செய்யும் கூட்டம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தியதை நாம் கண்டோம், இதிலிருந்தே அவர்களது உண்மையான வேஷத்தை உலகுக்கு அவர்களாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு விட்டது.http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view;=postlist&forum;=28&topic;=2342&Itemid;=287

    Comment by Robin — January 30, 2012 @ 11:09 pm

  15. நானும் பார்த்தேன், அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை.இல்லைன்னா இன்னேரம் பத்து பதிவு எழுத மேட்டர் தேறீயிருக்கும்!

    Comment by வால்பையன் — January 31, 2012 @ 3:26 am

  16. ஒண்ணுமே புரியலைங்க …அதப்பியமாக .. தம்பலவன்களும்.. என்னென்னமோ சொல்றீங்க. ரெண்டு பதிவா பிரிச்சாவது போட்டிருக்கலாம். என்னதாங்க நடந்தது..?எரிஞ்ச கட்சியா .. எரியாத கட்சியா..எது ஜெயிச்ச்சிது?

    Comment by தருமி — January 31, 2012 @ 4:34 am

  17. வாருங்கள் வால்பையன், நீங்க எழுதியிருந்தீங்கன்னா ஜோரா இருந்திருக்கும்.

    Comment by Ibnu Shakir — January 31, 2012 @ 5:15 am

  18. வாருங்கள் காபிர் தருமிஅருட்சொற்பொருள் அகாராதிஅதப்பியம் – ஆபாசம்தம்பலவன் – ஹிந்து

    Comment by Ibnu Shakir — January 31, 2012 @ 5:16 am

  19. பிஜே அண்ணன், சாட்சிகாரர்கள்தான் போலீஸை அணுகி அடுத்த விவாதத்தை நிறுத்திகொண்டார்கள் என்கிறார்சாட்சிக்காரர்கள், பிஜே அண்னன் பயந்துபோய் போலீஸை அணுகி அடுத்த விவாதத்தை நிறுத்திகொண்டார்கள் என்கிறார்.அடுத்த விவாதத்தில், எதாவது சாட்சிக்காரர்கள் சொன்னதால், உண்மையிலேயே முஸ்லீம்கள் கலவரத்தை உண்டு பண்ணலாம் என்ற அச்சத்தால் அடுத்த விவாதத்தை போலீஸே நிறுத்தியிருக்கலாம்.கடையநல்லூரிலிருந்து ஒருவர் இறையில்லா இஸ்லாம் பதிவிலிருந்து ஒரு பதிவை தன் முகநூலில் போட்டதற்காககவே பத்வா கொடுக்கப்பட்டு அங்கஹீனம் செய்ய ஜமாத்து கூட்டம் போடுவதாக இருந்தது. நேற்று போலீஸ் தலையிட்டிருக்கிறது.ஆகவே போலீஸ் முஸ்லீம்களின் முரட்டுத்தனத்துக்கு பயப்படுவதில் பொருளிருக்கிறது.

    Comment by Ibnu Shakir — January 31, 2012 @ 5:42 am

  20. மார்க்கவாதி இ.சா,//இந்த காபிர் சார்வாகனை என்ன பண்ணா தேவலை? கைலை கெடச்சா கைமாதான்.//காஃபிர் சார்வாகன் சொன்னாரென்றால் உங்கள் மூமின் புத்தி எங்கே போயிற்று???”மார்க்க அறிவியல்” பற்றி பதிவென்றால், அது எங்கிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்று முதலில் தெரிவிப்பவர்களுக்கு, இலவசமாக ஒரு ப்ளாக் திறந்து தரப்படும் என்ற பரிசை தரலாம். இதில் handicap ஆக சார்வாகன் கலந்துகொள்ள முடியாது என அறிவிக்கலாம். அந்த பதிவுகளில் அதிக மறுமொழிகள் யார் போடுகிறார்களோ அவர்களுக்கு ஆறுதல் பரிசு அளிக்கலாம் (அது எனக்குதான்).

    Comment by naren — January 31, 2012 @ 6:03 am

  21. மார்க்க மேதை இ.சா.//நடுவுல நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தியை பாத்து வேற ஓவரா சிரிச்சி வாய் வலி வயித்துவலியா போய்டிச்சி.//சுன்னத் ஜமாத்திற்கும்(ஷேக் அப்துல்லா ஜமாளிக்கும்) அண்ணன்களுக்கும் நடந்த குஸ்தி சண்டையை அந்த evidence கோஷ்டி ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்திருந்தால், அண்ணன் எப்படி டயலாக்குகளை எடுத்து விடுவார் என முன்னரே தெரிந்திருக்கலாம்.முக்கியமான விஷயம் தலைமை அண்ணனுக்கு அரபி சரியாக தெரியாது என்று “ஆதாரங்களின் தந்தை” ஜமாலி புட்டு புட்டு வைத்து அண்ணன்களை ஓட ஓட விரட்டுகிறார். அண்ணனுக்கே அரபி சரியா தெரியாத போது பாவம் அந்த apologetics என்னத்த செரிக்கிற கத்தியை எடுத்துக் கொண்டு வரமுடியும். இல்ல அரபி மொழிதான் கத்தியோ. சே…என்ன இது கத்தி வாள் என்று ஆயுத எழுத்தாவே வருது.இதில் புத்திசாலி யாரென்றால் நம்ம காவல்துறை அண்ணாச்சி. எப்படி ஜாக்கிரதையாக யாரும் நீதிமன்றம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ‘இந்துக்களும்’ எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று, application of mind உடன் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காட்டுகிறார்கள்.அந்த வெற்றி காணொளிளை முன்னரே பதிவு செய்து குஸ்தி முடிந்தவுடன் போட்ட மாதிரி தெரியுது. இதற்கு போட்டியே நடத்தாமல் அந்த வெற்றி செய்திகளை ஒளிப்பரப்பி இருக்கலாம்.tntj அலுவலகத்திற்கு போய் கெட்ட கெட்ட வசனம் ஹதீஸ்களை சொன்னால், பாவம் evidenceகாரர்கள் exhibit ஆகிவிடுவார்கள்.personal note: மதம் என்பது ஒரு கற்பனை கோட்டை, அதுவும் மததற்பெருமை என்பது building castles in the air. அதை கட்டியவர் தான் அதில் போய் வாழ முடியும்.

    Comment by naren — January 31, 2012 @ 6:22 am

  22. இ.சா.இதிலிருந்து ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டேன்..அண்ணன் டப்பாரா செட், அஞ்சலி எல்லாம் பொய் என்று கூறிவிட்டதால், குரானில் இருக்கும் டவ்ராத், இஞ்சீல் உண்மை என்று அடித்துவிட்டதால், குரானிலிருந்து ஒரு பட்வா..கேள்வி : மார்க்கம் test tube முறையில் குழந்தை பெறுவதை அனுமதிக்குமா?ஆம் அனுமதிக்கிறது. ஈஸா அலைஸ்லாம் தந்தையில்லாமல் பிறந்ததை குரான் வசனங்கள் அதீஸ்கள் சொல்லுகின்றன. அதனால் test tube முறையில் குழந்தை பெறுவதை மார்க்கம் அனுமதிக்கிறது.குரான் வசனம்3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்மேலும், செயற்கை முறையில் கருத்தரிக்க முடியும், test tube மூலம் குழந்தைகள் பிறக்க முடியும் என்ற அறிவியலை குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னால், நபி அறிந்தறியாத விஷயத்தை, சொல்லியுள்ளது.அனைதையும் அறிந்தவன் கடவுள்.

    Comment by naren — January 31, 2012 @ 6:40 am

  23. ஹா ஹா ஹ‌இபோதுதான் விவரமே புரிந்தது.சபாஷ் சரியான் போட்டி.நன்றி இராபின் உங்கள் பகிர்தலில்தான் பல விவரங்கள் அறிய முடிந்தது.*******************சரி நாமும் நம் பங்கிற்கு சில கருத்துகலை முன் வைப்போம்.இதற்கு மார்க்க்க மேதை இ.சா உட்பட்டு அனைவரும் பதில் அளிக்கலாம்அ). விவாதித்து ஒரு புத்தகம் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியிடமிருந்து மனிதர்களுக்கு அளிக்கப் பட்டது என அறிய முடியுமா?இது மதத்தில் அனுமதிக்கப் பட்ட ஒன்றா? மத புத்தக சான்றுகளுடன் விளக்கவும்.ஆ) மத புத்தக்த்தில் அறிவியல் என்று காட்டப்படும் அனைத்துமே தவறு பலமுறை நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.எ.கா உலக் உருண்டை என புத்தகம் சொலவ்தாக ஜாகிர் நாயக் இட்டுக்கட்டிய டாஹாஹா=நெருப்புக் கோழி முட்டை என்பது பொய் என்பது வெட்ட வெளிச்ச்மான் பிறகும் அவர் கடையில் கூட்டம் குறையவில்லை.தவுகீத் அண்ணினின் கிழக்கு மேற்கான கதை.ஆகவே மத புத்தக்த்தில் அறிவியல் என்பது சன்று அல்ல.ஒரு தவறு மட்டுமே போதும்.மத புத்தக் அறிவியல்&பரிணாம் எதிர்ப்பு குறித்த அனைத்து சந்தேகங்களும் சரியான் முறையில் தீர்க்க இலவச சேவை நாம் அளிக்கிறோம்இ) வரலாற்றுரீதியாக, மொழி ஆய்வு ரீதியாக,அகழ்வாய்வு ரீதியாக இதுவரை எவரும் எந்த சான்றுகளுமே முன் வைத்தது இல்லை.புத்தகங்களில் குறிப்பிடப்படும் பலரே யார் என்று தெரியாமல் ஒரு சக்தி புத்தகம் அனுப்புமானால் அதன் அறிவு சந்தேகத்திற்கு உரியது.இன்னும் நிறைய இருக்கிறது!!!!!!!!!!!!!!!!!

    Comment by சார்வாகன் — January 31, 2012 @ 6:43 am

  24. நண்பர்களேநம்ம் சகோக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக்[என்று நினைத்துக் கொண்டு] ஒரு கேள்வி கேட்கிறார்கள்.அதாவது கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய‌ விலங்கு ஒன்றின் படிமம் காட்டுங்கள் என்கிறார்கள்.இது குறித்த நம் கேள்விகள்.இபோது கிடைத்துள்ள படிமங்களில் பாக்டீரியா போன்ற உயிர்களே இருப்பதாக் நினைத்து கேட்கின்றார்.ஆனால் கிம்பெரல்ல என்னும் எடிகரன் கால விலங்கின் படிமம் இருக்கிறது என்ற அறியாமையில் வந்த கேள்வி இது.http://www.fossilmuseum.net/Fossil_Sites/whitesea/kimberella/kimberella.htmDescription: This spectacular specimen of early life predates the Cambrian Explosion by tens of millions of years. Many early attempts at diversity were present during this time, both here and in the Ediacara Fauna of the Flinders Ranges of Australia. Many strange forms were present, some of which still do not have any parallels in modern times. This one is known as Kimberella, thought by some to have had a tough shell much like modern-day molluscs. It has been found associated with Radulichnus which appears to show scrapings much like those made by the radula of a modern snail, as well as traces that may have been made as Kimberella moved along the seafloor. Whatever its true identity, it has been assigned to the Vendozoa, a group of animals that existed prior to the better-known Cambrian Explosion. The incredible soft-bodied preservation is believed to be the result of impressions made in a microbial mat contained within the sand. Kimberella fossils are also found in the Ediacara Hills of Australia.1.கேம்பிரியன் படிமங்களில் மனிதன் இல்லை.ஆகவே ஆதம் ஹவ்வா இவர்களை எப்போது __________ படைத்தான்?

    Comment by சார்வாகன் — January 31, 2012 @ 9:09 am

  25. நண்பர்களே நீங்கள் அனைவரும் ஏன் இந்த பி.ஜே பைபிள் இறைவேதமா என்று விவாதிக்க முன் வருகிறார்.ஆனால் குரான் பற்றி எதையாவது பண்ணி எஸ்கேப் ஆகிரார் என யோசிக்க்லாம்.அதற்கு அல்லாவே குரானில் வழி காட்டுகிறான்.பாருங்க பி.ஜே வின் முன்னோடி இப்ராஹிம்(ஆபிரஹாம்) சவாலை!!!!!!!!!*************அல்லா சூரியனை கிழக்கில் உதிக்க வைக்க்றார்.நீ மேற்கில் உதிக்க வை பாக்கலாம்.**************ஏன் அல்லா மேற்கில் உதிக்க வைக்க கூடாது என்றால் வசை மாறி பொழிந்து அழகிய முறையில் பதில் வரும்!!!!!!!!!!படியுங்கள்//2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.//

    Comment by சார்வாகன் — January 31, 2012 @ 9:20 am

  26. சார்வாகன்படிமங்கள் இருப்பதுவே பரிணாமத்திற்கு ஒரு சான்றுதானே என்று கேட்டால் சகோக்களிடமிருந்து பதிலேதும் வருவதில்லையே… ஏன்?

    Comment by தருமி — January 31, 2012 @ 9:24 am

  27. This comment has been removed by the author.

    Comment by சார்வாகன் — January 31, 2012 @ 9:38 am

  28. வணக்கம் தருமி அய்யாபடிம விலங்குகளையும் படைத்தது இறையே.அவைகளை சாகடித்த‌தும் இறையே.புதைத்து விளையாட்டு காட்டுவதும் இறையே.ஒவொரு காலகட்டத்திலும் உயிர்கள் தோன்றுவது இலை.ஒரு விலங்கு இன்னொரு விலங்காக் மாறாது.மாற்றப்பட்டு [இறையால்] படைக்கப் படுகின்றன்.புவியியல் கால அட்டவணை படிம வரலாறு என்பது படைப்பு ரெக்கார்ட் அய்யா!!!!!!!!!!!!!முதலில்ஒரு செல் பாக்டீரியா படைகக்ப்பட்டது அவ்ற்றில் ஈமானுள்ளது மட்டும் பிழைக்கும் மற்றது அழியும்.பிறகு பல் செல் பாக்க்டீரியா …………பிறகு கேம்பிரியன் விஅலங்குகள்…………………………………………….மனிதன் மட்டுமே வேதம் கொடுக்கப்பட்டவன்.இதிலும் ஈமானுள்ளவன் பிழைப்பான்,சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!!!!!!!

    Comment by சார்வாகன் — January 31, 2012 @ 9:39 am

  29. ராபின்பழைய ஏற்பாட்டில் வசனம் நன்றாக இருந்தால் சுவரில் எழுதிப்போட்டு அந்த வசனம் நமக்காகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பீர்கள். ஆபாசமாக இருந்தால் அது ஏதோ இஸரவேலர்களுக்கு சொன்னது. நாங்கள் ஏசு வழியை கடைபிடிக்கிறோம் என்பீர்கள். பத்துக்கட்டளை உண்மையாம் கற்பழிக்க சொல்லியிருப்பது யாருக்காம்?

    Comment by RAJA — January 31, 2012 @ 6:17 pm

  30. ராஜா,பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணம் என்று உண்டு. இது இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கும். பத்துக்கட்டளைகளில் கற்பழிக்கவேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் ஏசுநாதர் அன்பால் மனிதர்களை நல்வழிப்படுத்தவேண்டும், மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று போதித்தார். எனவே பழைய நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்துவிட்டது.இயேசு ஒரு பெண்ணை தவறாகப் பார்ப்பதுகூட கற்பழிப்பு குற்றத்திற்கு சமாமானது என்ற அளவுக்கு நல்லொழுக்கத்தை போதித்தார். நீங்கள் அல்லது இஸ்லாமியர்கள் சொல்லும் ஆபாசம் என்பது அன்றைய மக்கள் செய்தது, வரலாறாகப் பதியப்பட்டுள்ளது. எல்லாரும் ஆபாசமாக நடக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்படவில்லை.

    Comment by Robin — January 31, 2012 @ 7:46 pm

  31. பழைய ஏற்பாட்டில் விலங்குகளை பலியிடும் பழக்கம் உண்டு, எப்படி பலியிடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது போன்று உங்கள் வேதங்களிலும் முக்கியமாக ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதையெல்லாம் இப்போது கிறிஸ்தவர்கள் கடைபிடிப்பதில்லை. கிறிஸ்தவம் என்பதே Christ Centric. இதில் கிறிஸ்துவின் போதனைகளுக்குத்தான் முக்கியத்துவம். மற்றபடி பழைய ஏற்பாட்டில் வரலாறும் நல்ல கருத்துக்களும் உண்டு. பழைய ஏற்பாடு என்பது பல நூற்றாண்டுகளாக நடந்த சம்பவங்கள் தொகுக்கப்பட்டு பலமுறை மறு பிரதியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிற புத்தகம். இதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறோம். ஒரு கிறிஸ்தவனுக்கு பழைய ஏற்பாட்டில் எதை எடுத்துக்கொள்ளவேண்டும், எதை விட்டுவிடவேண்டும் என்று தெரியும். ஆனால் பழைய ஏற்பாடும் சேர்ந்த பைபிளை நாங்கள் வைத்திருப்பதால் உங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

    Comment by Robin — January 31, 2012 @ 7:58 pm

  32. பழைய ஏற்பாட்டில் பிரசங்கி (ecclesiastes) என்ற ஒரு தத்துவ புத்தகம் உண்டு.இதில் உள்ள பல தத்துவங்கள் கீதையிலும் பார்த்திருக்கிறேன்.1. தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.2. மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.3. சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?4. ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.5. சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது.6. காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.7. எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.8. எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.9. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.10. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.11. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.12. பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.13. வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.14. சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.15. கோணலானதை நேராக்கக் கூடாது, குறைவானதை எண்ணிமுடியாது.16. இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.17. ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.18. அதிக ஞானத்திலே அதிக சலிப்புணடு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.

    Comment by Robin — January 31, 2012 @ 7:58 pm

  33. பைபிளில் மனிதன் மனிதனுக்கு சொன்னது, மனிதன் கடவுளிடம் பேசியது, கடவுள் மனிதனிடம் சொன்னது என்ற மூன்றும் பதியப்பட்டிருக்கிறது. நான் மேலே சொன்ன புத்தகம் சாலமோன் ராஜா மனிதர்களுக்கு சொன்னது. எனவே நீங்கள் நினைப்பதுபோல் பைபிளில் உள்ளது எல்லாமே கடவுள் சொன்னது அல்ல. பைபிள் என்பதே பலரால் எழுதப்பட்ட புத்தகங்கள் கொண்ட தொகுப்புதான்.

    Comment by Robin — January 31, 2012 @ 8:03 pm

  34. @Robin Iam also christian by birth so i have to answer Robin, //பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணம் என்று உண்டு. இது இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கும். பத்துக்கட்டளைகளில் கற்பழிக்கவேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் ஏசுநாதர் அன்பால் மனிதர்களை நல்வழிப்படுத்தவேண்டும், மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று போதித்தார். எனவே பழைய நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்துவிட்டது.//How can u say this, Jesus never changed anything from oldtestament. Even he has said "Not even one word or one part of Neyapremanam(Old Testment rules) can be changed", Also u say Jesus wanted to change people by LOve. How can he do it suddenly ?? While God gave the rules for isralites he was also with hime right ? He cud have told at that time it self "Father we shud change people with LOVE not byy Vilence" Why he didnt do that ?? Because JESUS is also a MAN he tried to change the barbaric attitude of JEWS by making reforms and u people made hime GOD…

    Comment by Jenil — February 1, 2012 @ 12:57 am

  35. //How can u say this, Jesus never changed anything from oldtestament. Even he has said "Not even one word or one part of Neyapremanam(Old Testment rules) can be changed", //One who read both new testament and old testament can easily find the difference.//Also u say Jesus wanted to change people by LOve// Have you read Gospel?//How can he do it suddenly ??// When did he say he would change it suddenly?//While God gave the rules for isralites he was also with hime right ? He cud have told at that time it self "Father we shud change people with LOVE not byy Vilence" Why he didnt do that ?? // Read the teachings of Jesus Christ. He has explained it with a parable. I am not going to tell you where is it as you claim that you are a christian by birth. //Because JESUS is also a MAN he tried to change the barbaric attitude of JEWS by making reforms and u people made hime GOD…// Now you have admitted that He has made changes. Good. We, Chrsitians believe that He is Son of God. I don't care if you call Him man or God.

    Comment by Robin — February 1, 2012 @ 1:44 am

  36. நண்பர் இராபின் உங்களுக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது.அதில் உள்ள கருத்துகளை பின்பற்றுவதில் தவறில்லை.ஆனால் அது இயற்கைக்கு மேம்பட்ட சக்தியின் கருத்துகள்,தூதர்/மகனுக்கு அப்புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டு உலகெங்கும் பரப்ப சொல்லியுள்ளது.ஆகவே பிரச்சாரம் செய்வோம் என்பதுதான் பொதுவான மதவாதிகளின் கொள்கை.இதில் கிறித்தவமும் பிற மதங்கள் போல்தான்.இயேசு அல்லது ஈசா என்ற மனிதர் வரலாற்றில் வாழ்ந்தற்கு ஆதாரம் இல்லை என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.இதற்கும் வரலாற்று ரீதியான் ஆதாரங்கள் இல்லை.ஆகவே இதை குறித்து பெருமையோ பிரச்சாரம் செய்யவோ அவசியம் இல்லை.வஹாபிகளின் பல பிரச்சார உத்திகள் கண்டிக்கப் படவேண்டியதே.அதற்காக வஹாபி இஸ்லாமை எதிர்ப்பதால் மட்டும் பிற மதவாதிகளின் செய்ல் நியாயமாகி விடாது.ஆகவே பதிவின் சாராம்சமான பி.ஜே ஜெர்ரி குஸ்தி பற்றி விவாதிக்க வேண்டுகிறேன்.

    Comment by சார்வாகன் — February 1, 2012 @ 4:53 am

  37. @சார்வாகன்இதைப் பற்றி இங்கு எழுதுவதில் எனக்கும் விருப்பம் இல்லை. இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்கிறேன். வரலாற்று ரீதியான ஆதாரம் இருக்குதா இல்லையா என்பதை பிறகு வேறோரிடத்தில் பேசலாம்.//ஆகவே இதை குறித்து பெருமையோ பிரச்சாரம் செய்யவோ அவசியம் இல்லை.// நீங்களும் பாத்வா கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்களா?//அதற்காக வஹாபி இஸ்லாமை எதிர்ப்பதால் மட்டும் பிற மதவாதிகளின் செய்ல் நியாயமாகி விடாது.// சம்பந்தமில்லாத பேச்சு.//ஆகவே பதிவின் சாராம்சமான பி.ஜே ஜெர்ரி குஸ்தி பற்றி விவாதிக்க வேண்டுகிறேன்.// இதை இங்கு கேள்வி கேட்பவர்களிடம்தான் சொல்லவேண்டும்.

    Comment by Robin — February 1, 2012 @ 5:14 am

  38. மார்க்கவாதி இ.சா.இந்த தளங்களில் http://www.fossilmuseum.net/Paleobiology/CambrianFossils.htmhttp://theophanes.hubpages.com/hub/The-Strangest-Cambrian-Creatures-Ever-Discoveredஇருக்கும் படிமங்களை பார்த்தால், அரபி எழுத்துக்கள் போல தெரிகின்றன. அதை வைத்து பில்டப் பண்ணி ”படிமங்களில் அத்தாட்சிகள்” என்ற அறிவியல் தாவா செய்ய உங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் உங்களுக்கு செரிக்கிற் கத்தி..அதாங்க அரபி நல்லா தெரியுமே. காபிர்கள் சிந்திப்பதற்கும் உதவும்.

    Comment by naren — February 1, 2012 @ 5:18 am

  39. @நரேன்இம்மாதிரி அரபி எழுத்து என்று காட்டினால் அந்த குழந்தை உடம்பில் அரபியில் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது போல் இதையும் காஃபிர் அறிவியலாள்ர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.ஆகவே கிளுகிளுப்பான ஆபாச விவாதமே சிறந்த தாவா என்ற தவுகீத் அண்ணனின் கொள்கையை பின்பற்றலாம்.பி.ஜே வின் அழகிய ஆபாச கிளுகிளு விவாத வழிமுறை அனைத்து தாவா ஆட்களும் பிபற்றினால் விசிலடிசான் குஞ்சுகளான் இரசிகர் கூட்டம் திரண்டு வந்து ஆதரிக்கும்.அபோதைய தீப்பொறி ஆறுமுகம் ஆபாச பேசுக்கு பல இரசிகர்கள் இருந்தது போல் இப்போதைய தவுகீத் அண்ணனின் கிள்கிளுப்பூட்டும் பேச்சுக்கும் பல இரசிகர்கள்.பைபிளின் கிளுகிளு கதைகள் மட்டும் தவுகீத் அண்ணன் படித்து மகிழ்ந்தது வெட்ட வெளிச்சமாகி விட்டது.அது சரி புரியும் விடயம் மட்டும்தானே படிப்பார்!!!!!!!!!!!!.இன்னும் 600 கிளுகிளு கதைகள் சேக‌ரித்து வைத்து தினமும் படித்து மகிழ்கிறார்.சில கதைகளை விவாதத்தில் எடுத்துக் கூறினாலும் 50% மகிழ்ச்சி மட்டுமே!!!!!!!!!!!!!!அண்ணனுக்கு தீப்பொறி ஆபுதீன்(ஆறுமுகம்) என்னும் பட்டம் வழங்கி சிறப்பிக்கிறோம்!!!!!!!!!!!!!!!!!!சரி சுவனத்தில் கிளுகிளுப்பூட்டும் சொப்பன் சிந்தரிகளான ஹூரிகளும் கில்மான்களும் பி.ஜே& இரசிகர்களுக்கு அல்லாஹ் ஏற்பாடு பண்ணி இருப்பதை கிளுகிளுப்பாக ஜெர்ரி எடுத்து கூறும் முன் விவாதம் தடை பட்டதை எண்ணி வருத்தமாக் இருக்கிறது. *****************தவுகீத் அண்ணனுக்கு மட்டும்தான் கிளுகிளு ஆபாச பேச்சு வருமா!!!!!!!அனைவருக்குமே வருமே!!!!!!!!!!!!ஹா ஹா ஹாசரி இனி மத உணர்வை புண் படுத்தி விட்டார்கள் அப்ப்டின்னு யாராவது ஈமாந்தாரி சொன்னா ஹி ஹி இது அண்ணன் காட்டி வழி !!!!!!!!!!!!!!!!!!!இதுதான் உலகெங்கும் உள்ள உண்மையான மார்கக தாவா !!!!!!!!!!!போகோ ஹராம்,தலிபான்கள் கொஞ்சம் வித்தியாச்மாக செய்கிறர்கள்!!!!!!!!!!!!!

    Comment by சார்வாகன் — February 1, 2012 @ 10:59 am

  40. பி.ஜே ஜெர்ரி குஸ்தியை நேரம் செல்வு ப்ண்ணி பார்க்க முடியாத நண்பர்களுக்காக் தவுககீத் அண்ணனின் விவாதங்களை மட்டும் சுருக்கமாக் அளிக்கிரேன்.ஏன் கிறித்த்வர்களின் விவாதத்தையும் அளிக்க்லாமே என்றால் இத்னை பட்க்கும்போதே அவர்கள் சொன்னது என்ன வென்று புரிந்துவும்.ஜெர்ரி அண்ணச்சி என்ன சொன்னாக‌1.நீதிமன்றத்திலும் வேதமாக‌ பைபிள் ஏற்கப்ப்டுகிற‌து.2.பைபிளின் ஒவோரு புத்தகமும் வெவ்வேறு காலத்தவை .இருப்பினும் ஒவோரு புத்தகமும் அதன் முந்தைய புத்தகங்களுக்கு அத்தாட்சி கொடுக்கிறது.3. குரானிலும் பைபிள் பற்றி கூறப்பட்டுள்ளது.4.மிக பழைய மூல் பிரதிகள் பாதுகக்கப் பட்டு வருகின்றன்.பாவம் மிகவும் நாகரிகமக்வே கருத்தை எடுத்து வைத்தார்கள்.(contd)

    Comment by சார்வாகன் — February 1, 2012 @ 4:29 pm

  41. தவுகீத் அண்ணனின் பதில்கள்.1.நீதிமன்றத்தில் உறுதி எடுப்பது வேதத்திற்கு ஆதாரமாகாது.2. வேதத்தின் தன்னை பற்றிய உறுதி மொழி அதற்கு சான்றாகாது.திருடன் தன்னை சரியானவன் என்று நியாய்ப் படுத்த முடியாது.3.குரானில் சொல்லி இருப்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆகவே குரான் பைபிளை பற்றி என்ன கூறுகிறது என்பதை சொல்ல கூடாது. குரானில் குறிப்பிட்ட தவுராத்,இஞீல்,ஜபுர் வேதங்கள் பைபிள் அல்ல. அல்லா ஈசாவுக்கு கொடுத்ததை மனிதர்கள் மறைத்து விட்டனர்..அது இது அல்ல‌4. அல்லா முடியாமல் பிற வேதங்களை கறை படுத்த வில்லை, அதாவது.குரான் தவிர பிற வேதங்களை பாதுகாக்க விரும்பவில்லை.5. பைபிள் இறை வேதம் இல்லை என்பதற்கு முஸ்லிமகள் நிரூபிக்க , சான்றுகள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நிரூபிக்கும் தரப்பு வைக்கும் வாதங்களை மட்டும் மறுப்போம்..6. வேதத்தில் எழுதப்பட்டதை வைத்து அளித்தவன் தகுதியை அறிய முடியும்.[ ஜீனியஸ் என்று சொல்லப் படுபவர் கிறுக்கன் மாதிரிஎழுதி வைத்தால் ஒத்துக் கொள்ள முடியுமா?]7. பிறகு பி.ஜே விரும்பி படிக்கும் பைபிளின் கிளு கிளு பகுதிகளை ஈமாந்தாரிகள் எடுத்து இரசித்து இரசித்து கற்பனை செய்து படிக்கிறார்கள்.8. பைபிளில் தொப்புளில் ஆம்லேட் போடுவது உண்டு பி.ஜே கண்டு பிடிப்பு.ஈமாந்தாரிகள் விவரமாக‌ அவர்கள் வீட்டுப் பெண்களை ஆபாச விவாதத்திற்கு வர வேண்டாம் என்று கூறியிருப்பார்கள்.9. பைபிளில் உள்ளது உன்னத பாட்ட இல்லை மன்மதப்பாட்டா.? பி.ஜே கேள்வி .காம்த்தில் ஊறித்திளைத்தவனால் தான் காமம் பற்றி எழுத முடியும்.ஆகவே பைபிளில் காமம் பற்றிய வசனங்கள் உன்னதப்பாட்டில் வருவதால் இறைவேதமாக் இருக்க முடியாது.********************இது முதல் ரவுண்ட் நிலவரம்.இதே விவாதங்களை குரானுக்கும் பொருத்த முடியும் என்பதை பிஜே மறந்து விட்டார்!!!!!!!!!!!.இதனை நண்பர்கள் முயற்சிக்க்லாம்.

    Comment by சார்வாகன் — February 1, 2012 @ 4:31 pm

  42. இரண்டாம் சுற்றுகிறித்தவ்ர்கள்1. திருடனின் சாட்சியம் ஏற்கப்படாது என்றால் அல்லா குரானில் குரானை பாதுகாக்கிறேன் என்று சொல்வதையும் ஏற்க முடியுமா.குரானுக்கு குரானே சாட்சி என்பதும் சரியாகுமா?2. குரான் குறிப்பிடும் தவுராத்,இஞ்சீல் ,ஜபுர் ஆகியவை பைபிள் இல்லை என்ற பி.ஜேவின் கூறை அவர் வாதமாக் வைக்க மறுக்கிறார்.அதற்கு என்ன ஆதாரம்?.முகமது தோரா பயன் படுத்தியதாக ஹதிதுகள் கூறுகின்றன.அப்போதைய‌ 6ஆம் நூற்றாண்டு தோராவை விட பழமையான் மூல பிரதி தோராக்கள் உள்ளன்.எப்படி மாறி விட்டது என கூற முடியும்?3. 3. பி.ஜே கூறிய கருத்தான ஈசா இறந்து பல் ஆண்டுகளுக்கு பிறகே புதிய ஏற்பாடு பிறரால் எழுதப்பட்டதுஆகவே அவருக்கு அல்லா கொடுத்த இஞ்சீல் பைபிள் அல்ல என்றால் அல்லா அல்லது இயேசுவே இஞ்சீலை எழுதி இருக்க வேன்டும்.இதே கருத்தை வைத்துப் பார்த்தால் முகமதுவுக்கு எழுதப் படிக்க தெரியாது.அப்போது குரானுக்கும் இது பொருந்துமா?4. லூக்கா,மாற்கு… தொகுத்தால அவர்கள் பெயர் புதிய ஏற்பாடு தாங்கி வருகிறது.உதுமான் தொகுத்த குரானில் அவ்ர் பெயரை மறைப்பது ஏன்?5. இவர்களும் சில காமம் சொட்டு கிளுகிளு ஹதிதுகளை படித்து காட்டுகின்றனர்.************

    Comment by சார்வாகன் — February 1, 2012 @ 5:04 pm

  43. விவாதம் சம்பந்தமான வீடியோக்களை இங்கு பார்க்கலாம்.http://www.sakshitimes.org/index.php?option=com_content&task;=view&id;=564&Itemid;=43

    Comment by Robin — February 1, 2012 @ 7:28 pm

  44. சகோ செங்கொடி தனது தளத்தை பூட்டியிருக்கிறார் என்று வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.அவருக்கு உங்கள் ஆதரவு இருந்தால் அழைத்து தெரிவியுங்கள்.இவ்வளவு பேர்கள் படித்தார்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்று மகிழக்கூடும்

    Comment by Ibnu Shakir — February 1, 2012 @ 8:23 pm

  45. @ சார்வாகன் நான் போட்ட நோட்ஸுக்கும் நீங்க போட்ட பிட் நோட்ஸும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கிறது. telepathy plagiarism செய்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.ஒரு கேள்வி ”லூத்”தின் சந்ததியினர் யார????

    Comment by naren — February 1, 2012 @ 9:44 pm

  46. @இ.சா.என்ன செங்கோடி பயந்துவிட்டாரா??? அல்லது ஏதாவது பிரச்சனையா???அந்த தளத்தில் உள்ள பதிவுகளை இன்னும் முழுமையாக படிக்கவில்லையே!!!செங்கோடி தனது தளத்தை மறுபடியும் திறந்தால் பயனுள்ளதாக இருக்கும்.இ.சா. செங்கோடிக்காக துஆ செய்யுங்கள். செங்கோடியை எப்படி அழைக்க வேண்டும்?

    Comment by naren — February 1, 2012 @ 9:48 pm

  47. //One who read both new testament and old testament can easily find the difference.//I said a BIBLE verse said by JESUS that the "Old Testment" rules will never be changed.. I do not understand what ur point has to do with it ? //Have you read Gospel?//Ofcourse i have read the BIBLE more than u.. Iam asking u in "Old Testament" y did not GOD didnt mention anything about HEAVEN ?? Is there anywhere in "Old Testament rules" mentioned about heaven ?? The concept of HEAVEN itself is invention of JESUS. My question is if GOD is all powerfull Y can't he give his "Rules of LOVE" at the period of MOSES itself ?? Why there is a need of JESUS ?? If u say people didnt obey "Old Testment" so he sent JESUS even now people do not obey BIBLE so he will sent another person ?? // When did he say he would change it suddenly?//Until the period of JESUS there was no concept of LOVE or forgiveness Y GOD suddenly decided to use the path of LOVE instead of his old testment way of "PUNISHMENT" ? //Read the teachings of Jesus Christ. He has explained it with a parable. I am not going to tell you where is it as you claim that you are a christian by birth. //He has said many parables but i cudnt relate which u r meaning.. EVEN he has said once "I came only for ISREALITES not for others" This is said with a parable that "The bread of children shud not be given to dogs", Here Dogs -> people other than ISREALLITES..That include U and ME also, Still u people are happy to say iam a christian…I do not want anyone who said my anscestors as DOGS as my GOD// Now you have admitted that He has made changes. Good. We, Chrsitians believe that He is Son of God. I don't care if you call Him man or God.//The problem here is not about wat u believe or I believe..Because of this faith there was a big blood bath going on … Christians and JEWS say that prophecy says that ISRAEL belong to JEWS but MUSLIMS wont agree this..In the fight between the common man is daily sufferring. What iam trying to do is to abolish all religions so that PEACE WILL BE ON EARTH.

    Comment by Jenil — February 2, 2012 @ 1:29 am

  48. @narenஒரு கேள்வி ”லூத்”தின் சந்ததியினர் யார????http://lavistachurchofchrist.org/LVanswers/2005/07-30.htmhttp://www.biblehistory.net/Lot.pdf

    Comment by சார்வாகன் — February 2, 2012 @ 2:40 am

  49. காபிர் சார்வாகன், சரியான புள்ளியில் கேட்டுவிட்டீர்கள்.இது பற்றி ஒரு தனி பதிவு எழுத நினைத்திருந்தேன்யூதர்கள் தங்களது வரலாறுகளில் அருகே இருந்த மற்ற இனக்குழுக்களை இழிவு படுத்தி எழுதி வைத்திருக்கிறார்கள். (இது எல்லா இனக்குழுக்களும் செய்வது.. அவர்களுக்கே உரித்தான ஒன்றில்லை) அதன் வழியில் அருகே இருந்த மோயபைட்டுகள், அம்மானைட்டுகளை அப்பன் மகளுடன் கூடி பொறந்தவர்கள் என்று இழிவு படுத்தியிருக்கிறார்கள். இது வரலாறில்லை. ஹீப்ரு மொழி வார்த்தை விளையாட்டு. இப்போது இதனை உண்மை என்று அந்த பகுதி மக்களே நம்புவதுதான் கொடுமை. அந்த அம்மானைட்டுகளும் மோயபைட்டுகளும் இப்பொது முஸ்லீம்கள். ஜோர்டன் தலைநகர் அம்மான் அந்த பெயரிலேயே வந்தது. பின்னால் இது பற்றி…

    Comment by Ibnu Shakir — February 2, 2012 @ 4:57 am

  50. ஹா ஹா, நல்லா பொழுது போயிருக்குமே. எப்படி எல்லாம் நிரூபிக்க போராடுகிறார்கள். எதற்கு இதெல்லாம். நிறைய தெரிந்து கொள்ள உங்கள் தளம் ஒரு ஆடுகளம்.

    Comment by V.Radhakrishnan — February 2, 2012 @ 8:09 am

  51. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று கூறிய கருணாமூர்த்தி ஈசா நபி அலை அவர்களை சித்ரவதை செய்து கொன்ற யூத பயங்கரவாதிகள் எழுத்திலும் எத்தனை பயங்கரவாதிகள் என்பதைஅறிய முடிகிறது.

    Comment by S.Ibrahim — February 2, 2012 @ 9:52 am

  52. வாருங்கள் v Radhakrishnanபார்த்தாலே தெரியுமே. மூமின்கள் பொதுவாக தனக்கு ஒப்புமை இல்லாத கருத்துகளை மட்டுறுத்திவிடுவார்கள். நான் மட்டுறுத்துவதில்லை.

    Comment by Ibnu Shakir — February 2, 2012 @ 9:58 am

  53. ராபின் "விவாதத்தையும் சான் க்ரூப் ஓடியவிசயத்தையும் "இங்கு காணுங்கள் http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/san-ran-away-from-debate/

    Comment by S.Ibrahim — February 2, 2012 @ 9:58 am

  54. வாருங்கள் மதமல்ல மார்க்க சகோ S.Ibrahim இந்த எழுத்தெல்லாம் சும்மா ஜூஜூபி. தலசீமியா தலைசீவினியா வியாதியிலெல்லாம் மூமின்கள்தானே கெட்டிக்காரர்கள்?

    Comment by Ibnu Shakir — February 2, 2012 @ 9:59 am

  55. மதமல்ல மார்க்க சகோ S.Ibrahim அந்த இணைப்புகளை நான் பதிவிலேயே கொடுத்திருக்கிறேனே..ஏதோ நம்மால் முடிந்த தாவாவை செய்துகொண்டிருக்கிறேன். பதிவின் இறுதியில் பாருங்கள். தோற்றோடிய நசரியாக்களை பற்றி தவ்ஹீத் அண்ணன் அளிக்கும் பேருரை விளக்கவுரை, சவுக்கடி, செருப்படி மரண அடி, நெத்தியடி இருக்கும்.

    Comment by Ibnu Shakir — February 2, 2012 @ 10:01 am

  56. ராபின் ////பி.ஜெ இதுவரை இந்த அளவுக்கு விஷய ஞானம் உள்ள பதிலடி கொடுக்கும் குழுவினரை பார்த்திருக்க மாட்டார். குரானைப் பற்றிய விவாதம் நடந்தால் பதில் சொல்லத் தெரியாமல் மீண்டும் பழையதுபோல ஆராய்ச்சி செய்ய போகிறேன் என்று எஸ்கேப் ஆக வேண்டியிருக்கும், அதனால்தான் எப்படியாவது விவாதத்தை தடுக்கவேண்டும் என்று 'ப்ளான்' பண்ணி செய்திருக்கிறார்.///ராபின் .அவர்கள் எந்த அளவுக்கு பதிலடி கொடுத்தார்களோ அந்த விஷய ஞானத்தை கொஞ்சம் ஓரிரண்டு உதாரணங்களை சொல்லுங்களேன், அதே போன்று பீஜெவுடைய எத்தனை கேள்விகளுக்கு பதில் அளித்தார் என்பதையும் விளக்குங்களேன் . ஜமாலி ஜல்லியடித்த அளவில் கூட உங்களது விஷய ஞானங்களால் முடியவில்லையே , நீங்களாகவே ஏன் சொரிந்து ,சொரிந்து புண்ணாக்க வேண்டாம்.இரு தரப்பிலும் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன ,அதை பார்த்து பகடுகள் புரிந்து கொள்ளட்டும்

    Comment by S.Ibrahim — February 2, 2012 @ 10:21 am

  57. //ஈசா நபி அலை அவர்களை சித்ரவதை செய்து கொன்ற யூத பயங்கரவாதிகள் எழுத்திலும் எத்தனை பயங்கரவாதிகள் என்பதைஅறிய முடிகிறது.//@ நண்பர் இப்ராஹிம்குரானின் படி யூதர்கள் ஈசாவை கொல்லவில்லை.அல்லாஹ் அவரை (சதி செய்து அல்லாவே மிகப் பெரிய சதிகாரன்) காப்பாற்றி விட்டான்.***********3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.**************என்ன போங்க சகோ இப்ராஹிம்சிலுவையில் ஈசா உலகத்தின் பாவங்களுக்காக் கொல்லப்ப்ட்டார் என்பதுதானே கிறித்தவர்களின் (பிடி)வாதம்.அதை ஒத்துக் கொண்டால் ஈசா இறைமகன் ஆகி விடுவார்.அது சரி தீப்பொறி ஆபுதீன் சிஷ்யன் அவர் வழியிலேயே!!!!!!!!!!மூமின்களுக்காக் குரான் சரியாக தெரியவில்லை என்பதற்கு இதுவும் ஒரு நிரூபணம் .மார்க்க மேதை இ.சா போன்றவர்கள் இருக்கும் போது நாம் எப்படி என்றே வெட்க்மாக இருக்கிற‌து.ஏன் இ.சா முயற்சிக்க கூடாது நாமும் கொஞ்சம் உதவுவோம்!!!!!!

    Comment by சார்வாகன் — February 2, 2012 @ 10:27 am

  58. ///தலசீமியா தலைசீவினியா வியாதியிலெல்லாம் மூமின்கள்தானே கெட்டிக்காரர்கள்?///எண்ணை திருடுவதற்காக அந்நியநாட்டில் புகுந்து அந்நிய மக்களை கட்டிபோட்டு சித்ரவதை படுத்தி கொல்லுவதோடு ,பேரழிவு ஆயுதங்கள் என்று பழி போடுபவர்களைவிடவா?

    Comment by S.Ibrahim — February 2, 2012 @ 10:28 am

  59. சார்வாகன்இந்த தளம் கிறித்தவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதால் ,அவர்களது கருத்துப்படியே நாங்கள் நபி என்று கொள்ளும் ஈஸாவை கொன்ற யூதர்களை ,,,,,என்று கூறியுள்ளேன் .

    Comment by S.Ibrahim — February 2, 2012 @ 10:36 am

    • ஆக நீங்கள் கிருச்துவருக்கு ஒரு வாதம் இஸ்லாமியருக்கு ஒரு வாதம் ஹிந்துக்களுக்கு ஒரு வாதம் இப்படி ஒவ்வருவருக்கும் ஒரு வாதம் செய்வீர்கள் போல் உள்ளது. அனால் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நண்பரே இதற்க்கு பெயர் வாதம் இல்லை விதண்டாவாதம். இதை மூமின்கள் உங்களை போலவே நன்றாக செய்வார்கள் என்பதை தான் மேலே கூரியிருகிரர்கள்.

      Comment by kanbro — February 23, 2012 @ 10:00 pm

  60. சார்வாகன் ///இதே விவாதங்களை குரானுக்கும் பொருத்த முடியும் என்பதை பிஜே மறந்து விட்டார்!!!!!!!!!!!.///பொருத்தி பாருங்களேன் ,தகர்த்து காட்டுகிறோம் ,இறை அருளால்

    Comment by S.Ibrahim — February 2, 2012 @ 10:43 am

  61. மார்க்க மேதை இ.சாசான் குரூப் ஆளுகளும் கொஞ்சம் விவகாரமான ஆளுகள்தான் அவர்கள் தளத்துக்கு சென்றுபார்த்தால் மூமின்கள் ,குரான்,ஹதித்கள் பபற்றி பல விவரம் திரட்டி வைத்து உள்ளார்கள்.ஜெர்ரி தெலுங்கு காரர் போல் தெரிகிறது.எப்ப்ப பாரு முமின்களோடே விவாதத்துக்கே அலையுர கோஷ்டி.எப்ப்டியோ இந்த விவாதத்தை வைத்து நல்ல காசு தேத்துவார்னு நினைக்கிறேன்.http://www.sakshitimes.org/index.php?option=com_content&task;=blogcategory&id;=26&Itemid;=42என்ன இ.சா நிறைகுடம் நீங்க உக்காந்து கூடமில்லத கடையில் ட்டீ ஆத்துகிறோம்.ஜெர்ரி அண்ணையா பால் தினகரனுக்கு போட்டியாக் மாறினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை!!!!!!!!!!http://www.sakshitimes.org/index.php?option=com_content&task;=view&id;=356&Itemid;=42பெரும்பாலும் முமின்கள் வரலாறு குறித்த விவரங்கள் விவாதிப்பது இல்லை.சாக்சி இஸ்லாமின் முதல் இரு நூற்றாண்டு கால கண்க்கீடு அருமையாக் தொகுத்து உள்ளார்கள்.இதனை மறுக்கும் அளவுக்கு தவுகீத் அண்ணனிடம் சரக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான்!!!!!!!!!!!.

    Comment by சார்வாகன் — February 2, 2012 @ 10:45 am

  62. 1.தீப்பொறி ஆபுதீன் காமம் சொட்டும் உன்னதப்பாட்டு கள்ள உறவு பற்றித்தான் பேசுகிற‌து என அடித்துக் கூறுகிரார்.கள்ள உறவு பற்றி அவரிடமேம் ஏமாற்ற முடியுமா!!!!!!!!!2.தீப்பொறி ஆபுதீன் குரான் கூறும் தவுராத்,இஞ்சீல் முதலியவை எப்படி இபோதுள்ள பைபிள் அல்ல என்று கூறுகிறார்.திருபபி அப்ப்டியே இயேசுவுக்கு கொடுக்கப்பட்டதில் இயேசு என்று மூன்றாம் விகுதியில் வருவதால் அது இது இல்லை என விள்க்கம்.[கொடுமை அய்யா!!!!!!!!. இவருக்கு யாராவது வரலாறு சொல்லிகி கொடுத்தால் பரவாயில்லை.பைபிள் இரை வேதமோ இல்லையோ ஆனால் வர்லாற்றில்(இரண்டாம் நூற்றாண்டு] சில புத்தகங்களை ரோம அரசன் கான்ஸ்டன்டைன் தொகுத்த நாள் முதல் அது அப்ப்டியே இருக்கிறது.அப்ப்டி மாறியிருப்பதாக வரலார்று ஆய்விதழ்களில் கட்டுரையிட்டால் நோ…பல் பரிசு கிடைக்கும்]3.சிலர் ஆலயத்தில் உள்ளே வரக் கூடாது என்று பைபிள் கூறுவதால் இறை வேதம் அல்ல என்கிறார் தீப்பொறி

    Comment by சார்வாகன் — February 2, 2012 @ 11:48 am

  63. ராபின்பழைய ஏற்பாடு முழுக்க கர்த்தர் இஸ்ரவேலர்களுக்காகத்தான் சொல்கிறார். எகிப்தியர் எப்பூசியர் கானானியர் ஆகியோர்களை கொல்லவும கொள்ளையடித்ததை பங்கு போடவும் திருமணமாகாத பெண்களை உங்களுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். என் தளத்தில் வந்து பாருங்கள். நன்றாக கவனிக்க வேண்டும். இந்த கட்டளைகளை பிறப்பித்தது உலகத்தை ஏழு நாட்களில் படைத்த கர்த்தர். இவரைத்தான் இயேசு பிதா என்கிறார். நீங்கள் பிதாவாகிய கர்ததர் சொன்ன வார்த்தைகளை விட்டுவிட்டு இயேசு சொன்ன வார்த்தைகளை பின்பற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். சரி. ஏசு சொன்னதை எந்த பாதிரியார் பின்பற்றுகிறார்? பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ளளாதே என்று ஏசு சொல்லியிருக்கிறார். பையில் காசு இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு பாதிரியாரைக் காட்ட முடியுமா? பழைய ஏற்பாடு அபத்தம் என்றால் அதனை நீக்கி விடலாமே? ஏன் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் நான் உன்னை ஆசீர் வதிப்பேன் போன்றவை பழைய ஏற்பாட்டு வசனங்கள் . அதை மட்டும் பயன்படுத்துகிறீர்கள் ஏன்?

    Comment by RAJA — February 2, 2012 @ 4:59 pm

  64. மதமல்ல மார்க்க சகோ எஸ். இப்ராஹிம்//இந்த தளம் கிறித்தவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதால் ,அவர்களது கருத்துப்படியே நாங்கள் நபி என்று கொள்ளும் ஈஸாவை கொன்ற யூதர்களை ,,,,,என்று கூறியுள்ளேன் .//நல்லா சமாளிக்கிறீர்கள். சும்மாவா காககககே சிந்திக்க மாட்டீர்களா என்று கெஞ்சுகிறார்?அதுசரி, நான் எங்கே சகோ கிறித்தவர்களுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறேன்? அது கிடக்கட்டும். இந்த பதிவில் வந்து, “ காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா காக்காவலிப்பில் ஜிப்ரீலை கண்டதாக நினைத்துகொண்டதுமாதிரி, நாயை பார்த்து சாத்தான் என்று சொன்னது மாதிரி ஏன் உளறுகிறாய்?” என்று என்னை கேட்க வேண்டியதுதானே?

    Comment by Ibnu Shakir — February 2, 2012 @ 5:43 pm

  65. காபிர் ராஜா, ராபின் செய்வது கிறிஸ்துவ தக்கியா.

    Comment by Ibnu Shakir — February 2, 2012 @ 5:45 pm

  66. @நண்பர் இராபின்பாருங்கள் கால்த்தின் கொடுமையை சில விள்க்கங்கள் கொடுப்பது கிறித்தவத்திற்கு சாதமாக் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.இருந்தாலும் நம் விவாதம் இன்னொரு நாள்.நீங்கள் உங்கள் வாதம் நண்பர் இராஜா& ஜெனிலுடன் தொடருங்கள்.நான் முடிக்கிறேன்.*********************1.குரானை நம்புவர்களால பைபிள்(தவுராத்+ஜபுர்+இஞ்சீல்)தவறு என்று கூற முடியாது.தீப்பொறியாறின் கருத்தாகிய இது(தவுராத்+ஜபுர்+இஞ்சீல்) அது(பைபிள் )அல்ல என்பது வராற்று ரீதியாக இஸ்லாமின் கொள்கை அல்ல.இபின் கதிர் எழுதிய தீர்க்க தரிசிகளின்[நபி] கதை என்னும் புத்தக்த்தில் குரான் சொல்லும் தீர்க்கதரிசிகள் அனைவரின் கதைகளை பைபிளில் இருந்தே எழுதினார்.இந்த கருத்து வஹாபிகளின் தர்கா வழிபாடு கூடாது போன்ற இப்போதைய கருத்தே. தீப்பொறிஆபிதீனின் கருத்தை வலியுறுத்திய இஸ்லாமிய அறிஞர் எவரையும் மேற்கோள் காட்ட்ட இயலாது.2.பால் என்பவர் எழுதிய நிருபங்கள் அவர்தான் மாற்றி விட்டார் என்று என்ன கூறினாலும் மூன்றாம் நூர்றாண்டிலேயே பைபிள் முழுமை பெற்றது என்னும் போது 6 ஆம் நூர்றாண்டு முகமது அதனை தவிர்த்து வேறு ஒன்றை பயன் படுத்தினார் என்பதை நம்ப முடியுமா? அப்படி பால் ஒரு வில்லன் எனில் அவர் பெயரை அல்லா குறிப்பிடவில்லையே.3.குரான் எதையுமே தெளிவாக கூறாது என்பதை ஜெர்ரி & கோ முழுமையாக் பயன் படுத்திக் கொண்டனர். இயேசு என்பவர் இறந்தாரா இல்லையா என்பதையும் குரானில் இருந்து எதுவுமே சொல்ல முடியாது.அல்லா காப்பற்றினார் ,திரும்பி வருவார் என்றும் குரான் கூறுகிற‌து.4. பைபிள் ஹதித் பற்றி எதுவுமே தெரியாத ஒருவருக்கு குரான் மொழி பெயர்ப்பு ஒரு புத்தகமாக் மட்டும் கொடுத்தால் என்ன புரியும்? நம்ம் முமின்களே குரானில் எரொம்ப வீக்.5. தீப்பொறி ஆபுதீனே அல்லா சுவன‌த்தில் ஹூரிகளை ஏற்பாடு செய்து வைத்து இருப்பது முமின்களுக்கு பரிசு என்று கூறியது இஸ்லாமின் மீது எளிதாக் விமர்சனம் வைக்கும் சூழலை உருவாக்கிவிட்டார்.அப்ப இதுக்குத்தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கேள்வி இயல்பாக வரும்.தீப்பொறியின் இவ்விவாத காணொளிகள் இஸ்லாமின் மீதான் விமர்சனமாக் அதிக நாட்களுக்கு பயன்படும்.பைபிளின் அடல்ஸ் ஒன்ளி வசனம் தவிர தீப்பொறியிடம் சரக்கு இல்லைமிக அருமையாக பல தகவல்கள்,கருத்து பரிமாற்றம் தந்து இருக்க வேண்டிய ஒரு விவாதத்தை வீணடித்து விட்டார்கள்.பி.ஜே மாதிரி ஆட்களை மத்த்தின் மேல் நடத்த பிற முஸ்லிம் இயக்கங்கள் தடை கோரும். இனிமேல் இம்மாதிரி விவாதம் நடக்க காவல் துறை அனுமதி கிடைக்காது என எதிர்பார்கக்லாம்.ஜெர்ரி அண்ணையா ஜெப கோபுரம் கட்டும் அளவுக்கு பணம் அள்ளுவாரா?,கல்லூரிகள் கட்டுவாரா?,பால் தினகரனுக்கு சரியான் போட்டியாவாரா என்பதெல்லாம் நடக்கப் போகும் வரலாறுAll in the Game!!!!

    Comment by சார்வாகன் — February 2, 2012 @ 6:02 pm

  67. நண்பர் இராஜா ந்ல்ல கேள்விகள்.ஒரு சிறு கருத்து .படைப்பு ஆறு நாட்கள் ஏழாம் நாள் ஓய்வு நாள்,அது சனிக்கிழமையா ஞாயித்துக் கிழமையான்னும் ஒரு குஸ்தி நட்க்குது கிறித்தவ்ர்களுக்குள்ளே!!!!!!!!நல்ல கேள்விகள்.கொஞ்சம் எளிமை படுத்தி விடலாம்(இதை நம்ம முமின்கள் கேட்க முடியாது.நாம் கேட்கலாம் யூதனுக்கு பதிலா முஸ்லிம்னு போட்ட கேள்வி அங்கேயும் பொருந்தும்)1.கடவுள் எதுக்கு யூதர்கள் அல்லாதவர்களை கொன்று கொள்ளையடித்து,நாட்டை பிடிக்க சொன்னார்?யூதர்கள் இன்னும் செய்கிறார்கள்!2.பழைய ஏற்பாடுதான் வில்லங்கமாக ,ஆபாசமாக் இருக்க கழட்டி விட்டு விட வேண்டியதுதானே!!!!!!!!!!!![இங்கு ப்.ஏற்பாடுக்கு பதில் ஹதித் என்று போட்டலும் சரியா வரும்]

    Comment by சார்வாகன் — February 2, 2012 @ 6:24 pm

  68. காபிர் சார்வாகன்//ஜெர்ரி அண்ணையா ஜெப கோபுரம் கட்டும் அளவுக்கு பணம் அள்ளுவாரா?,கல்லூரிகள் கட்டுவாரா?,பால் தினகரனுக்கு சரியான் போட்டியாவாரா என்பதெல்லாம் நடக்கப் போகும் வரலாறுAll in the Game!!!!//அது எந்த அளவுக்கு நமது நசரியா சகோதரர்கள் ஏமாற தயாராக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது

    Comment by Ibnu Shakir — February 2, 2012 @ 6:45 pm

  69. //அது எந்த அளவுக்கு நமது நசரியா சகோதரர்கள் ஏமாற தயாராக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது//அதான் இராபின் மாதிரி ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்களே.

    Comment by rajan — February 3, 2012 @ 12:34 am

  70. உலக அமைதிகாக பாடு படுற ,நியாயத்தீர்ப்பு/கியாமத் நாளிலே சொர்க்கத்துக்கு தூக்கி செல்லபடுவதட்காகவும் இருக்கிற இந்த இரு கூட்டமும் ஒத்துமையா இல்லாம இப்படி அடிசுக்குறது நல்லாவா இருக்கு ???????????? சண்டை புடிக்கதிங்கப்பா….கபீர்கள் நாங்க மட்டும் தான் தண்டிக்கப்பட போறோம் …72 கில்மாவும் எங்களக்கு இல்ல……..ஒத்துமையா வீட்டுல இருக்க புள்ள குட்டிங்கள படிக்க வைங்கப்பா

    Comment by Vijaiy from colombo — February 3, 2012 @ 12:37 am

  71. முஸ்லிம்கள் மற்ற மனிதர்களை போல இல்லை. அவர்கள் அரை மனிதர்களே(sub humans). அவர்களுடைய மூளை மற்ற மனிதர்களின் மூளையை போல சிந்திப்பது இல்லை. மற்ற மனிதர்கள் சரி, தப்பு என்பதை தங்க விதி(golden rule), தர்க்க அறிவு(logic) மற்றும் மனசாட்சியின்(conscience) மூலம் நிர்ணயம் பண்ணுகிறார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கோ முஹம்மது தான் அளவுகோல். அவன் செய்தது எல்லாம் நல்லது, அவன் தடுத்தது எல்லாம் தப்பானது. அவன் கொள்ளை அடித்தான், கற்பழிப்புகளை செய்தான், படுகொலைகள் செய்தான், கூட்டுக்கொலைகள் செய்தான், வழிப்பறி கொள்ளைகள் செய்தான், எட்டு வயது பெண் குழந்தையோடு கலவியில் ஈடுபட்டான், தன்னை விமர்சனம் செய்தவர்களை ஆளை அனுப்பி படுகொலை செய்தான், தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்காதவர்கள் மீது எல்லாம் முன்னறிவிப்பு ஏதும் இன்றி அதிரடி தாக்குதல்களை நடத்தினான். இவை எல்லாம் முஸ்லிம்களை பொறுத்தவரை தப்பே இல்லை, மாறாக அவை எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் போரிட்ட புனித செயல்கள். முஸ்லிம்கள் தங்கள் மூளையையும் மனசாட்சியையும் முகம்மதுவுக்கு அடகு வைத்துவிட்ட சுய அறிவு அறவே இல்லாத அவன் சொன்னதை செய்கின்ற மனித ரோபோக்கள்(zombies). இவர்களிடம் நாம் அறிவார்ந்த விவாதம் புரிவது என்பது இயலாத ஒன்று.
    http://www.tamil.alisina.org

    Comment by ஆர்ய ஆனந்த் — April 1, 2012 @ 3:08 pm

  72. ஜெய்னுல் ஆபிதீன் நடத்தும் “இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” என்ற தலைப்பிட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியை தொலைகாட்சியில் சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் அவர் இப்படி உளறினார். “நாம் சொல்வதெல்லாம் மார்க்கமல்ல, நபிகள் நாயகம் எதை சொன்னார்களோ அது தான் மார்க்கம்.” இந்த முட்டாளை எப்படி அறிஞர் என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 1, 2012 @ 3:41 pm

  73. முஸ்லிம்கள் மிகவும் ஆபத்தானவர்கள். எப்படி ஜெர்ரி & கோ ஜெய்னுல் ஆபிதீன் கும்பலோடு நேரெதி விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இது மிக மிக ஆபத்தான செயல்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 1, 2012 @ 3:48 pm

  74. ஜெர்ரி & கோ தங்களுடைய விவாதத்தின்போது, முஹம்மதின் அக்கிரம செயல்களை எடுத்து காட்டவில்லை. அதனால் அவர்களுடைய உயிர் பிழைத்தது.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 1, 2012 @ 3:51 pm

  75. பைபிள் பற்றிய விவாதம்- ஏடுகளின் நம்பகத்தன்மை- இவை பல வரிசையில் நடந்ததை ஏன் சார்வாகன் – தேவப்பிரியா-பகடு முறையாக ஆராயவில்லை.

    Comment by Rafeeque — June 8, 2012 @ 6:28 am

  76. நண்பர் ரப்பீக் அவர்கள் அழுப்பியது நியாயமான கேள்வியே. இவ்விவாதத்தின் முதல் பகுதிகள் தவிர மீதம் பற்றி இங்கு விவாதிக்கப்படவில்லை.

    பழைய பைபிள் ஏடுகள் 27000 உள்ளன என்பதை மிக அழகாக உடைத்தனர். ஆனால் அவற்றின் நம்பிக்கைதன்மைக்கும் ஏடுகளுக்கும் சம்பந்தமில்லை.

    மேலும் ஏடுகள் நம்ப்பிக்கைகுரியவை என பைபிள் அறிஞர் புரூஸ் சொன்னார், என்றனர், ஆனால் அவரும், பல உண்மைகளை சொல்லி உள்ளார்.

    அதே போலா தௌரத் நூல்கள் இன்றைய பைபிளியல்படி, மினிமலிசம் என்பதுபடி பொ.மு. 300 – 200 வாக்கில் தான். இதற்கு பழைய ஏற்பாட்டில் பல ஆதாரங்கள் உள்ளது.
    அதே போல புதிய ஏற்பாட்டில் 27 புத்தகத்தில் ஒன்றைக்கூட ஏசுவை பார்த்தவர்களால் எழுதப்படவில்லை. இதை தமிழில் பைபிளைத்தரும் கூழுள்ள இணைய தளத்தில் காணலாம்.
    http://www.arulvakku.com/biblecontent.php
    இவற்றைக் கூட குழு சொல்லவில்லை.

    பைபிள் புனிதமானதா என்பதற்கு – ஆதாரமாக ஒரு வாதத்தைக் கூடத் தரவில்லை.
    பீஜே தரப்பு- விவாதத் தலைப்பை
    “அருவருப்பானது பைபிளா- குரான், ஹதிஸா” என மாற்றி விட்டது.

    Comment by தேவப்ரியா சாலமன் — June 9, 2012 @ 10:09 am


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment