pagadi

August 22, 2011

இஸ்லாமிய அறிவியல்: ஷைத்தான் ஏன் காதில் உச்சா போகிறான்?

Filed under: Uncategorized — பகடு @ 4:22 pm

நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஷைத்தானின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள், சாப்பாடு, திருட்டுத்தனம், ஆகியவற்றை பற்றி விலாவாரியாக விளக்கியுள்ளார்கள். இந்த ஷைத்தான் மற்றும் ஷைத்தான்களை பற்றி நாம் அறிந்துகொள்வது இஸ்லாமிய கடமையாகும்.

நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது நபிமொழி கூற்றுக்களின்படி ஷைத்தான்களை பற்றி சில முக்கியமான விஷயங்களை நாம் அறிகிறோம்

ஒன்று அல்லாஹ்வால் நிறைய அல்லாஹ்க்களாக ஆக முடியாது. ஒரே ஒரு அல்லாஹ்தான். அவர் அர்ஷில் உட்கார்ந்திருக்கிறார்.

ஆனால் ஷைத்தான் ஏராளமான ஷைத்தான்களாக ஆக வலிமை படைத்தவன்.

3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

புகாரி 1899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(மேலே ஹதீஸின் படி ஷைத்தான்கள் என்ற பதத்துக்காகத்தான் காட்டியிருக்கிறேன். ரமலான் மாதத்தில் ஷைத்தான்களே இல்லாமல் ஒரே புனிதமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியெல்லாம் இல்லை. அதேமாதிரி உலகம் நரகமாகத்தான் இருக்கிறது என்று நமக்கு தெரியும். இதுக்கு பி ஜெயினுலாபுதீன் எதாவது விளக்கம் வைத்திருப்பார். முடிந்தால் கேட்கவும். அதற்கு விதண்டாவாதமாக பதில் கூறி, விதண்டாவாதம் என்று லிஸ்டில் சேர்த்துவிடுவார். அந்த லிங்கை இங்கே தரவும்)


ஆனால் உலகத்தில் மொத்தம் எத்தனை ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்ற அறிவியற்பூர்வமான கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க முயல்வோம். இதற்கான பதில் நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் இந்த நபிமொழியில் உள்ளது.

Volume :1 Book :19

தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்.

1144. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்.


3270. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள்.
Volume :3 Book :59

நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது ஒரு காதிலா இரண்டு காதிகளிலுமா என்று நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இரண்டு காதுகளிலும் ஷைத்தான் இருக்கிறான் என்றால் அவன் ஒவ்வொரு ஆளிலும் இரண்டு ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்று அறியலாம்.

ஆனால் இன்னொரு ஹதீஸ் இருக்கிறது

இதன் படி மூக்கிலும் ஷைத்தான் இருக்கிறான்.

3295. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இந்த மூக்கு ஹதீஸ் ரொம்ப முக்கியமானது என்று அறியவும். ஏனெனில் நீங்கள் தொழுகை செய்தீர்களா செய்யவில்லையா என்பதெல்லாம் இங்கே ஷைத்தானுக்கு முக்கியமல்ல. முஸ்லீமா இல்லையா என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொருவரும் தூக்கத்திலிருந்து எழும்போது மூக்கில் நிச்சயம் ஷைத்தான் இருக்கிறான். நீங்கள் நீர் விட்டு கழுவினால் — மூன்று முறை.. எண்ணிக்கை முக்கியம் — தண்ணீரில் கரைந்து ஷைத்தான் போய் விடுவான். )

ஆகவே ஒருவர் முஸ்லீமாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அவர்களது உடலுக்குள் மூன்று ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்று அறியலாம். உலக மக்கள் தொகை 6,924,419,172 என்று சார்வாகனின் பதிவு சொல்கிறது. அதாவது ஏழு பில்லியனை தொட செல்கிறது. ஆகவே ஏழை மூன்றால் பெருக்கிக்கொள்ளவும். 21 பில்லியன் ஷைத்தான்கள் இருக்கின்றன.

ஆனால் இதில் பி ஜெயினுலாபுதீன் மாதிரி நம்முடைய கற்பனையை நாமே அவிழ்த்துவிடவும் செய்யலாம்.

ஒவ்வொரு ஆளிலும் ஒரு ஷைத்தாந்தான் இருக்கிறான். அவன் இந்த பக்கம் காதிலும் அந்த பக்கம் காதிலும் மூக்கிலும் அவ்வப்போது போய் வந்துகொண்டு இருக்கிறான் என்றும் கற்பனையை அவிழ்த்து விடலாம். இதற்கெல்லாம் நபி மொழி ஆதாரம் இல்லை. ஆகையால் நமது சொந்த சரக்கு. அப்படி ஒரே ஒரு ஷைத்தான்தான் காது மூக்கு எல்லாவற்றிலும் உச்சா போகிறான் என்றும் நபிஹள் நாயகம் சொல்லவில்லை. காதில் ஒரு ஷைத்தான், மூக்கில் ஒரு ஷைத்தான் என்றும் சொல்லவில்லை. அவர் சொல்லாததால் நாம் சொல்லுவதுதான் சரி என்பது பிஜே அவர்களது விவாத முறை.

சரி குறைந்த பட்சம் எவ்வளவு ஷைத்தான்கள் இருக்க வேண்டும்? உலகத்தில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சைத்தான்கள் இருக்க வேண்டும். ஆகவே குறைந்தது ஏழு பில்லியன் ஷைத்தான்கள் இருக்கின்றன என்று மதிப்பிடலாம்.நிச்சயமாக எல்லா இந்துக்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் காதுகளிலும் உச்சா போய் உச்சா போய் சைத்தானே துவண்டு போயிருப்பான். எல்லோருடைய மூக்கு அழுக்கிலும் ஷைத்தான் குடியிருக்கிறான். பாவம் அவன். அதுவும் இவ்வளவு காலம் இவ்வளவு பேர்களின் காதுகளில் உச்சா போவதற்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்றும் இஸ்லாமிய அறிவியல் முறைப்படி ஆராய்ந்தால் அவன் மீது பரிதாபம் வருவதை தவிர்க்க முடியாது.

ஷைத்தான்கள் காபிர்களின் காதுகளிலும், இணைவைப்பவர்கள் காதுகளிலும் உச்சா போவதால், இந்த காபிர்களின் காதுகளுக்கு ஒன்றும் கெடுதல் நடப்பது மாதிரி தெரியவில்லை. ஆனால், நபிஹள் நாயகம் பொய்யா சொல்லியிருப்பார்? அவர் என்றைக்காவது பொய் சொல்லியிருக்கிறாரா? அவரது எதிரிகள் கூட அவர் பொய் சொன்னதாக கூறியதில்லையே!

ஆனால் இந்த உண்மையை வைத்து நாம் இன்னொரு ஆராய்ச்சி செய்யலாம். இது இஸ்லாமிய அறிவியல் செய்பவர்களுக்கு அரிய வாய்ப்புமாகும்.

இதற்கு இப்படிப்பட்ட பரிசோதனையை வடிவமைத்தால் என்ன?

தினமும் தொழுகைக்கு போகும் முஸ்லீமின் காதுகளை ஒரு முறை நன்றாக சுத்தம் செய்து தொழுகைக்கு அனுப்ப வேண்டும்

தொழுகைக்கே போகாத ஒரு காபிர் அல்லது முஸ்லீமின் காதுகளையும் நன்றாக சுத்தம் செய்து தொழுகை நேரத்தில் தூங்கச் சொல்ல வேண்டும்.

இப்போது தொழுகைக்கு போகும் முஸ்லீமின் காதுகளில் ஷைத்தானின் உச்சா இருக்காது. ஆனால், தொழுகைக்கு போகாமல் தூங்கியவரின் காதுகளில் ஷைத்தானின் உச்சா இருக்கும்.

இரண்டு பேருடைய காதுகளையும் சுரண்டி வேதி முறைப்படி ஆராய வேண்டும். எந்த வேதிப்பொருட்கள் எல்லாம் தொழுகைக்கு போகாதவர் காதுகளில் இருக்கிறதோ அதெல்லாம் ஷைத்தானின் உச்சா.

(ஆனால், தொழுகைக்கு போனவரின் காதுகளில் எக்ஸ்ட்ராவாக எதாவது வேதிபொருள் இருந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அது அல்லாஹ்வின் உச்சா என்று தயவு செய்து சொல்லாண்டாம்)

ஒரு வித்தியாசமும் இல்லை என்று முடிவு வந்துவிட்டால் என்ன செய்வது என்பது இன்னொரு இஸ்லாமிய அறிவியல் கேள்வி.

இப்போதும் கற்பனையை அள்ளி விடலாம்.

இவ்வளவு காலம் உச்சா போய் உச்சா போய் துவண்டு ஒரே ஒரு சொட்டுகூட உச்சா வராமல் ஷைத்தான் போய் செத்துப்போய் விட்டால் என்ன செய்வது? ஆகவே ஷைத்தான் தெம்புக்கு நல்லா சாப்பிட்டு நல்லா தண்ணி குடிக்கணும்ல?

ஷைத்தான் சாப்பிடுகிறான் தண்ணீர் குடிக்கிறான் என்றும் நாம் அறிகிறோம். எப்படி? இதோ ஹதீஸ்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (4108)
3764 عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (3764)

ஆனால் என்ன விஷயம் என்றால் அவன் இடது கையால் அருந்துகிறான் இடது கையால் சாப்பிடுகிறான். ( இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஏதும் இருக்கிறார்களா? எதற்கும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்)

இந்த ஷைத்தான் எதனை சாப்பிடுகிறான் எதனை குடிக்கிறான் என்று தெரியவில்லை.

ஆனால் ஏதோ ரொம்ப அவன் வயித்துக்கு கெடுதலான ஒன்றைத்தான் சாப்பிடுகிறான் என்று நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள்.


ஏனென்றால் அடிக்கடி அவன் குசு விட்டு நாற்றமடிக்கிறான்

1222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:.
பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்றுவிட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம் ‘நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகிவிடுவார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மறதி ஏற்பட்டால் அமர்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யவேண்டும்” என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என அபூ ஸலமா கூறுகிறார்.

ஆகையால் ஷைத்தான் ரொம்ப கெட்ட நாத்தமடிக்கும் சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறான் என்று தெரிந்துகொள்ளலாம்.

தொழுகை பண்ணுமிடத்தில் நிச்சயம் ஷைத்தான் இருக்கிறான் என்று அறியவும். இகாமத் முடிந்தவுடனேயே திரும்பி வந்துவிடுகிறான் என்று நபிஹள் நாயஹம் ஸல்ல்லாஹூ அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். எதற்கு? தொழுகையை பறித்து செல்வதற்கு.

தொழுகையை எப்படி பறித்து செல்லமுடியும் என்று விதண்டாவாதமாக நீங்கள் கேட்கலாம். ஆகவே இங்கு சொல்லப்படாத விஷயங்களை இட்டு கட்டி நாம் பதில் சொல்லலாம். அதுவே பிஜெயினுலாபுதீன் வழி என்று அறிக.
தொழுகையை பறித்து செல்வது என்பது தொழுகைக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வெகுமதிகளை பறித்து செல்வது என்று பொருள் என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால், ஷைத்தான் எவ்வளவு அதிகமான தொழுகை வெகுமதிகளை கையில் வைத்திருப்பான் என்று சிந்திக்க வேண்டும். உலகத்திலேயே மிக அதிகமான வெகுமதியை பெற்றவனாகக்கூட ஷைத்தான் இருக்கலாம். இதில் சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.

751. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஷைத்தோனோடு கட்டி புரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள். அவர் தூணில் கட்டி வைத்திருந்தார். அப்புறம் போனாப் போவுதுன்னு விட்டுட்டார். அவன் ஓடிட்டான். அப்பவே அவர் கட்டிப்போட்டிருந்தார் என்றால், இன்னிக்கு இவ்வளவு ஷைத்தான் அலும்பு பண்ணமாட்டான். ஜெயினுலாபுதீன் எல்லாம் வேலையில்லாம இருந்திருப்பார். நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பொய் சொல்லமாட்டார்.

புகாரி 1210. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். (தொழுது முடித்ததும்) ஷைத்தான் எனக்குக் காட்சி தந்து என் தொழுகையை முறித்துவிட முயன்றான். அவனை அல்லாஹ் எனக்கு அடிபணியச் செய்தான். அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து காலையில் நீங்களெல்லாம் பார்க்க வேண்டுமென விரும்பினேன். எனக்குப் பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்கு (திருக்குர்ஆன் 38:35) என்று சுலைமான் நபி அவர்கள் கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தேன். (அதனால் அவனைவிட்டு விட்டேன்) இழிந்தநிலையில் அவனை அல்லாஹ் ஓடச் செய்துவிட்டான் என்று கூறினார்கள்.

எங்கே ஓட செய்துவிட்டான்? என்று விதண்டாவாதமாக கேட்பவர்களுக்கு அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பதில் கூறுகிறார்

”நிச்சயமாக ஷைத்தான் ஆதமுடைய மக்களின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்’ எனக் கூறினார்கள்.

புகாரி 2038. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அவசரப்படாதே!” நானும் உன்னோடு வருகிறேன்” என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் ‘ஸுப்ஹானல்லாஹ் – இறைத்தூதர் அவர்களே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்.

இவ்வாறு ஓடி ஓடி களைத்துவிடுகிறானல்லவா? அதனால், நேரே போய் காதில் உச்சா போய்விடுகிறான்.

இதிலிருந்து அல்குரான் நபிஹள் நாயகத்தின் படைப்பு அல்ல, அது அல்லாஹ் இறக்கிய இறைவேதம்தான் என்று தெளிவாகிறது அல்லவா?

யா அல்லாஹ்

25 Comments »

  1. உங்களுக்கு அமைதி உண்டாவதாக ஜனாப் இபின் ஷாகிர்,சைத்தானை பற்றி புட்டு புட்டு வைக்கிறீர்களே!!!!!!!!!.நம்பங்கிற்கும் கொஞ்சம்1.ஷைத்தான்&சகாக்கள் பயமுறித்தினால் பயப்படாதே ஆனால் அல்லா பயமுறுத்தினால் பயப்படுங்கள்.**********************3:175. ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் – நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்___________2.ஷைத்தான் பாருங்க உங்க நபியையே மறக்க(எத்னை?) வைத்து விடுகிறான்.******************************6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.______________3.முக்கியமான் இரகசியம் ஷைத்தான் அல்லாவின் ஏஜென்ட்.பாருங்கள் ஒவ்வொரு நபிக்கும் ஒரு ஷைத்தான் போட்டு கண்காணிக்கிறார்.************************************6:112. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் – எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.__________________4. காஃபிர்களை(எங்களை) வழி கெடுக்கவும் சில ஷைத்தான்களை ஏற்பாடு செய்துள்ளார் இறைவன்.*********************************19:83. காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?________________5 சிக்னல் ப்ராஸ்ஸெசிங்(signal processing) இந்த வசனத்தில் சொல்வதை பாருங்கள்.அல்லா அளிக்கும் சிக்னலில் ஷைத்தான் நாய்ஸ்(noise) கல்லக்கும் போது ஃபில்ட்டெர்(filter) மாதிரி குழப்பத்தை நீகுகிறார் இறைவன்***************22:52. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் – மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.______________6.ஷைத்தான் உழைக்கும் வர்க்கம் போல் தெரிகிற‌து,நல்ல ஊடு கட்டுவான் போல!!!!!!!!!!!!***************38:37. மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;____________7.ஷைத்தானை விரட்டுவது எப்படி?.பூமிக்கு பக்கத்தில் உள்ள வானம்(21.30 படி வானம் என்பது பூமி நீங்கலான பிரபஞ்சம்) உள்ள நட்சத்திரங்களை கொண்டு ஷைத்தானை கல்லெறிந்து விரட்டலாம்.இது மிகவும் அறிவியல் உல்ள வசனம்.அனைவரும் படித்து அஸ்ட்ரானாமி(astronamy),காஸ்மாலாஜி (cosmology) போன்ற்வற்றில் தெளிவு பெறுங்கள்.************67:5. அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.

    Comment by குல்பி பிரியன் — August 22, 2011 @ 6:21 pm

  2. நன்று காபிர் சார்வாகன்… ஈமானுள்ள மூஃமின்களை விட காபிர்கள் அதிகமாக ஷைத்தான்களை தெரிந்து வைத்திருப்பது ஆச்சரியமானதில்லை. நபிஹள் நாயெஹெம் ஸல்ல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு அடுத்தபடி அதிகமாக ஷைத்தானை தெரிந்து வைத்திருப்பவர் நீங்களாகத்தான் இருக்கும்.எதற்கும் அப்படியே மேலே இருக்கும் தமிழ்வெளி பட்டையை கிளிக் பண்ணி தமிழ்வெளிக்கு அனுப்பினால் நல்லது.

    Comment by Ibnu Shakir — August 22, 2011 @ 6:52 pm

  3. வாஹாபி முல்லா இப்னு சாகிர் அவர்களே,ரமலான் மாதத்தில் “ஜகாத்” நிறைய கிடைத்துவிட்டது போலும். அதனால் ஷைத்தான் பக்கம் சென்றுவிட்டீர்கள்.ஒரே ஒரு ஷைத்தான் இருந்தார் என்கிறது.================================================முஸ்லிம்அத்தியாயம்: 1, பாடம்: 1.35, எண் 115"ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே, "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்து விட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம் தான்" என்று கூறியபடி விலகிச் செல்கிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).================================================ஒரு ஷைத்தான் எப்படி பல ஷத்தான்கள் ஆனார்கள்….================================================முஸ்லிம்.அத்தியாயம்: 4, பாடம்: 4.33, எண் 681அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(என்று குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ஒருபோது உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே (அந்த நேரத்தில்) தடை ஏற்படுத்தப் பட்டுவிட்டது. மேலும், (வானுலகச் செய்திகளை ஒட்டுக்கேட்கச் செல்லும்) ஷைத்தான்கள்மீது தீப்பந்தங்கள் (எரிகற்கள்) ஏவிவிடப்பட்டிருந்தன. ஷைத்தான்கள் தம் கூட்டத்தாரிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல் வெறுமனே) திரும்பியபோது "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று (ஷைத்தான்) கூட்டத்தார் கேட்டார்கள். அதற்கு ஷைத்தான்கள் "நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது; மேலும், எங்கள்மீது தீப்பந்தங்கள் ஏவப் பட்டன" என்று கூறினர். "ஏதேனும் புதியதொரு நிகழ்ச்சி ஏற்பட்டதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்று, நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்" என்றார்கள்.அவ்வாறே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்றார்கள். அவர்களில் ஒரு குழுவினர் திஹாமா எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். உக்காழ் சந்தைக்குச் செல்லும் வழியில் நக்ல் எனுமிடத்தில் அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களைஷைத்தான்கள் செவியுற்றபோது "நமக்கும் வானுலகச் செய்திக்கும் இடையே தடையாக இருப்பது இதுதான்" என்று கூறிக்கொண்டு, தங்கள் கூட்டத்தாரிடம் திரும்பினர். அவர்களிடம், "எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் வியத்தகு ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, அதை நாங்கள் நம்பினோம். நாங்கள் (இனி) ஒருபோதும் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம்" என்று கூறினர். இதையடுத்து அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு "நிச்சயமாக ஜின்களில் சிலர் (குர்ஆனைச்) செவியேற்றனர் என எனக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப் பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக!" எனும் (72:1ஆவது) வசனத்தை அருளினான்.அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)================================================கல்யாணம் செய்து புள்ளை குட்டி பெத்துப்பாங்களோ..????????!!!!!!!!

    Comment by naren — August 22, 2011 @ 9:33 pm

  4. ஷைத்தான் அண்ட முடியாத நிலையிலிருக்கும் முல்லா சாகிர்…ஹா..ஹா…ஹா..ஷைத்தான்கள் என்பது “bacteria virus" ஜின் என்பது “cosmic rays" என்று அறிவியல் தாவா செய்ய நினைத்தால்ஷைத்தான் ஒரு கருப்பு நிறம் நாய் என்பதற்கு ஆதாராம்.================================================முஸ்லிம்அத்தியாயம்: 4, பாடம்: 4.50, எண் 789அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், "உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும்போது தமக்கு வாகன(ஒட்டக)த்தின் சேணப்பலகை போன்ற ஒன்று இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சேணப்பலகை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண், மற்றும் கறுப்பு நாய் ஆகியன (குறுக்கே கடந்து கவனத்தை ஈர்த்து) அவரது தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள்."அபூதர் (ரலி) அவர்களே! சிவப்புநிற நாய் மஞ்சள்நிற நாய் ஆகியவற்றை விடுத்து, கறுப்புநிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள்" என்றார்கள்.அறிவிப்பாளர் : அபூதர் அல் கிஃபாரீ (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்)================================================கருப்பு நாய் எப்படிங்க காதில் மூக்கில் இருக்க முடியும்??????????????தொடரும்…….

    Comment by naren — August 22, 2011 @ 9:41 pm

  5. ஆனால், பின் வரும் சந்ததியினரை காக்க அருமையான ஒரு வழி================================================புகாரி5165. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது 'பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ்ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸக்த்தனா' (அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறைவா! என்னை விட ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எனக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!') என்று பிரார்த்தித்து அதன்பின்னர் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான்தீங்கிழைப்பதில்லை. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 105 Volume :5 Book :67================================================நன்றிஇப்படிக்கு மூளை குழம்பி போய் உள்ள காஃபிர்.

    Comment by naren — August 22, 2011 @ 9:44 pm

  6. வாஹாபி முல்லா இப்னு சாகிர் அவர்களே,இதை முதல் கமண்டாக படிக்கவும்.ரமலான் மாதத்தில் “ஜகாத்” நிறைய கிடைத்துவிட்டது போலும். அதனால் ஷைத்தான் பக்கம் சென்றுவிட்டீர்கள்.ஒரே ஒரு ஷத்தான் இருந்தார் என்கிறது.================================================முஸ்லிம்அத்தியாயம்: 1, பாடம்: 1.35, எண் 115"ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே, "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்து விட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம் தான்" என்று கூறியபடி விலகிச் செல்கிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).================================================ஒரே ஒரு ஷைத்தான் எப்படி பல ஷைத்தான்கள் ஆனார்….================================================முஸ்லிம்.அத்தியாயம்: 4, பாடம்: 4.33, எண் 681அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(என்று குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ஒருபோது உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே (அந்த நேரத்தில்) தடை ஏற்படுத்தப் பட்டுவிட்டது. மேலும், (வானுலகச் செய்திகளை ஒட்டுக்கேட்கச் செல்லும்) ஷைத்தான்கள்மீது தீப்பந்தங்கள் (எரிகற்கள்) ஏவிவிடப்பட்டிருந்தன. ஷைத்தான்கள் தம் கூட்டத்தாரிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல் வெறுமனே) திரும்பியபோது "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று (ஷைத்தான்) கூட்டத்தார் கேட்டார்கள். அதற்கு ஷைத்தான்கள் "நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது; மேலும், எங்கள்மீது தீப்பந்தங்கள் ஏவப் பட்டன" என்று கூறினர். "ஏதேனும் புதியதொரு நிகழ்ச்சி ஏற்பட்டதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்று, நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்" என்றார்கள்.அவ்வாறே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்றார்கள். அவர்களில் ஒரு குழுவினர் திஹாமா எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். உக்காழ் சந்தைக்குச் செல்லும் வழியில் நக்ல் எனுமிடத்தில் அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களைஷைத்தான்கள் செவியுற்றபோது "நமக்கும் வானுலகச் செய்திக்கும் இடையே தடையாக இருப்பது இதுதான்" என்று கூறிக்கொண்டு, தங்கள் கூட்டத்தாரிடம் திரும்பினர். அவர்களிடம், "எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் வியத்தகு ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, அதை நாங்கள் நம்பினோம். நாங்கள் (இனி) ஒருபோதும் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம்" என்று கூறினர். இதையடுத்து அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு "நிச்சயமாக ஜின்களில் சிலர் (குர்ஆனைச்) செவியேற்றனர் என எனக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப் பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக!" எனும் (72:1ஆவது) வசனத்தை அருளினான்.அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)================================================கல்யாணம் செய்து புள்ளை குட்டி பெத்துப்பாங்களோ..??????????????!!!!!!இப்படிக்கு மூளை குழம்பி போய் உள்ள காஃபிர்.

    Comment by naren — August 22, 2011 @ 9:54 pm

  7. //அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களைஷைத்தான்கள் செவியுற்றபோது "நமக்கும் வானுலகச் செய்திக்கும் இடையே தடையாக இருப்பது இதுதான்" என்று கூறிக்கொண்டு, தங்கள் கூட்டத்தாரிடம் திரும்பினர்.//இந்த அற்புதமான குரான் வரிகள் என்ன என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.ஒருவேளை கொள்ளையடிப்பது நல்வழி என்று சொல்லும் அல்லாஹ்வின் திருவசனமாக இருக்குமோ என்னமோ?48:20. ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).

    Comment by Ibnu Shakir — August 23, 2011 @ 5:43 am

  8. அருமையாக எழுதுகிறீர்கள் நண்பரே :).

    Comment by Tamilan — August 23, 2011 @ 10:45 am

  9. கண்ணியத்திற்குறிய ஜனாஃப் இமாம் இப்னு ஷாகிர் அவர்களே.இந்த காஃபிரின் பணிவான் வணக்கம்(நீங்கள்தானெ வணக்கம் சொல்லக் கூடாது நான் சொல்லலாமா?) உங்கள் முமின்கள் கேட்ட பல‌ கேள்விகளுக்கு ஏதோ கொஞ்சம் பதில் அளித்து உள்ளேன்.பார்த்து தங்கள் மேலான கருத்துகளை சில பதிவுகள் ஆக வழங்குமாறு கேட்கிறேன்.

    Comment by சார்வாகன் — August 23, 2011 @ 6:47 pm

  10. ha haaaa ha…. sema comedy…

    Comment by Shyam — August 23, 2011 @ 11:57 pm

  11. I would like to do Funny islamic Dawa with you ? you simply Rocking Man. Especially in Heisenberg uncertainty principle articles shows that real islamic psedoScience. but you didn't publish my(muhamad pitchai)comments for Heisenberg uncertainty principle

    Comment by Nakeeran — August 24, 2011 @ 3:39 am

  12. ஷ்யாம் அவர்களே கமெண்ட் போட்டதற்கு நன்றி (note to self காபிருக்கு நன்றி சொல்வது சுன்னத்தா என்று ஆராய வேண்டும்)

    Comment by Ibnu Shakir — August 24, 2011 @ 5:34 am

  13. நக்கீரன் அவர்களே,முகம்மது நபி சொல்லிகொடுத்திருக்கும் இந்த ஏகஇறைவனின் தாவாப்பணியில் பல காபிர்கள் சேர்கிரதை நினைத்து என் உள்ளம் பூரிக்கிறது.வாருங்கள்.கமெண்ட் எதனியும் நான் தடுப்பதில்லையே! நீங்கள் கமெண்ட் போட்டால் அது நிச்சயம் வரும்.

    Comment by Ibnu Shakir — August 24, 2011 @ 5:36 am

  14. காபிர் சார்வாகன்,உங்களது பதிவு படித்தேன். அதில் ஈமானுள்ள ஒரு மூஃமின் படிக்கக்கூடாத விஷயங்கள்தான் இருக்கின்றன. உங்களை ஷைத்தான் வழிநடத்துகிறான். அந்த பதிவை படித்தால் எங்களையும் ஷைத்தான் வழிநடத்திவிடுவான். அந்த பதிவை முழுவதும் படித்தும் ஈமான் மூலமாக என் கண்ணை மறைத்து என்னை அல்லாஹ் காப்பாற்றிவிட்டான். அது பற்றி ஒரு தனி பதிவு எழுதுகிறேன்.

    Comment by Ibnu Shakir — August 24, 2011 @ 5:40 am

  15. Respectful Immam ibnu shakir Plz Read My comments in Heisenberg uncertainty principle and Reply me

    Comment by Nakeeran — August 24, 2011 @ 6:24 am

  16. நண்பரே, அடிமையை பற்றிய ஒரு பதிவு போட்டேன் .. வந்து proof பார்த்து விட்டீர்களானால் நன்றாக இருக்கும்…http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html

    Comment by Tamilan — August 24, 2011 @ 9:55 am

  17. ஹைதர் அலி said…நண்பர் சார்வாகன் என்கிற, ஆற்றல் அரசு என்கிற, சந்தானம் என்கிற,சங்கர் என்கிற,வானம் என்கிற,இப்னு என்கிற,இப்னு ஜாஹிர் என்கிற, நண்பருக்கு நலமா?ஏன் இத்தனை வேடம் நேர்மை என்பதே கிடையாதா?என்றைக்கு மூகமுடி அனிந்துக் கொண்டு அட்டைக் கத்தி சுழற்றுவதை நிறுத்த போகிறீர்கள்.மேலே சொன்ன என்கிற என்கிற என்று சும்மா சொல்லவில்லை அனைத்துக்கும் ஆதரம் இருக்கிறது.August 25, 2011 1:30 ஆம் +++++++பாருங்க அஜரத்ஒரு காஃபிரின் எழுத்துக்கும்,ஈமானுள்ள முமினுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கலை என்ன செய்வது.உங்கள் அளவிற்கு என்க்கு விஷய ஞானம் கிடையாது என்றாலும் ஒரு தாவா தலைவருடன் இணையாக கருதும்(இது சுன்னத்தா) அள்விற்கு இந்த காஃபிர் இருக்கிறான் என்பது சுவனம் கிடைத்தது போல் இருக்கிறது.ஹா ஹா ஹா

    Comment by சார்வாகன் — August 24, 2011 @ 2:37 pm

  18. சார்வாகன்ஒரு உண்மையான ஈமானுள்ள என்னை காபிரான உங்களோடு இணைத்து இணை வைத்துவிட்டார்களே என்று வருந்துகிறேன்

    Comment by Ibnu Shakir — August 24, 2011 @ 3:14 pm

  19. தமிழன் உங்கள் பதிவை பார்த்து கமெண்டும் போட்டுவிட்டேன்

    Comment by Ibnu Shakir — August 24, 2011 @ 3:46 pm

  20. நண்பரே,உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக. நீங்கள் என்ன கிண்டலடித்தாலும் நாங்கள் அமைதியாகவே இருப்போம். '' நிராகரிப்போரை (மெதுவாக)வெட்டுங்கள், (குறைவான)தீயில் பொசுக்குங்கள்,அவர்கள் சொத்தை(பங்கு பிரித்து) கொள்ளையடியுங்கள். ஏனென்றால் இறைவன் (அறைகுறை) ஞானமிக்கவன், (எதோ கொஞ்சம்) கருணையாளன்''33.423.65.3456ஆகவே,ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா?ஆப்புலைன்ப்பீ..ச்சே…காம்

    Comment by வானம் — August 26, 2011 @ 12:24 am

  21. ஐயா,தங்களின் தளத்துக்கு இன்றுதான் முதலில் வந்துள்ளேன். இத்தனை காலம் வர முடியாமல் தெரியாமல் இருந்து விட்டேனே என்று வருத்தப்படுகிறேன். உங்கள் பதிவையும் கமெண்டுகளையும் படித்து விட்டு வயிறு வலிக்கச் சிரித்தேன். ஏனெனில் இஸ்லாத்தில் காதில் உச்சா போகிற கதை இருப்பது எல்லாம் எனக்குத் தெரியாது. சுப்பர்இப்படிக்கு காபிர் ராஜா

    Comment by RAJA — August 27, 2011 @ 5:39 pm

  22. வாருங்கள் வானம் இவ்வளவு எளிதாக இஸ்லாமை புரிந்துகொண்டுவிட்டீர்களே! சும்மாவா இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று பிஜே சொல்கிறார்?

    Comment by Ibnu Shakir — August 27, 2011 @ 6:05 pm

  23. வாருங்கள் காபிர் ராஜா!வந்த உடனேயே இஸ்லாமில் உள்ளதை கதை என்று சொல்லி உங்களது காபிர் குணத்தை காட்டிவிட்டீர்களே! ஷைத்தான் காதில் உச்சா போவது கதை அல்ல, புராணமல்ல. ஷைத்தான் காதில் உச்சா போவது ஒரு அறிவியல் உண்மை. வேண்டுமானால் கார்பன் கூட்டாளி, முஹம்மது ஆஷிக் போன்றோரில் அறிவியல் தளங்களில் இதன் நிரூபணத்தை கேட்டுப்பாருங்கள். அவர்கள் அழகாக இஸ்லாமிய அறிவியல் முறையில் டார்க் மேட்டர், பிக் பேங் தியரி எல்லாம் போட்டு ஷைத்தான் காதில் உச்சா போகும் அறிவியல் உண்மையை விளக்குவார்கள்.வேண்டுமானால் இந்த பக்கத்துக்கு சென்று உங்களது அறிவியல் சந்தேகங்களை கேளுங்கள். அவர்கள் இஸ்லாமிய அறிவியலில் டாக்டரேட் வாங்கியவர்கள். நாத்திகர்களிடம் முஸ்லீம் பதிவர்களின் கேள்விகள்

    Comment by Ibnu Shakir — August 27, 2011 @ 6:10 pm

  24. //ஒருவர் முஸ்லீமாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அவர்களது உடலுக்குள் மூன்று ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்று அறியலாம். //நான்கில்லையா ? இரண்டு காதில்; இரண்டு மூக்கில் …//உலகத்தில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சைத்தான்கள் இருக்க வேண்டும்//கணக்கு தப்பு … ஒவ்வொரு மனிதன் x 4 ..அல்லவா?//நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; //ஓ! இதனால்தான் எந்த மூமின்னும் இங்கு வந்து பதில் சொல்லவில்லையோ? இருக்கும் ..! இருக்கும் ..!!

    Comment by தருமி — August 31, 2011 @ 11:22 pm

  25. ஹெலோ நான் கபீர் விஜய் பேசுறேன் யப்பா பீ…சே தொல்ல தாங்க முடியல,இஸ்லாமிய அறிவியல் புல்லரிக்க வைக்குது,http://www.onlinepj.com/kelvi_pathil/panbadukal_kelvi/valathu_kayal_sapidumpothu_idathu_kayal_thanneer/தண்ணி குடிக்கிறதுக்கு இவ்வளோ அலும்பா??சரி காதுல உச்சா போற சைத்தான் எப்படி கிளீன் பண்ணுவான்??மார்கதலைவர் இ.சா அவர்களே விளக்கம் ப்ளீஸ் ..இஸ்லாமிய அறிவியல் படி காதுல சைதனுக்காக பேப்பர் ஹோல்டர் இருக்கா?இல்ல மண்டைல இருக்க களி மண்ணை எடுத்து கிளீன் பண்வான??அப்புறம் சைத்தானுக்கு நரகத்துல 72 கில்பான்ஷி இருக்குமா?என் வாயில் இறைவனின் பூந்தியும் பொட்டுகடலையும் நிரம்பி வழிவதாக ..

    Comment by Vijaiy from colombo — January 8, 2012 @ 1:17 am


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment